தேவையானவை :
காளான் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
காளான் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை :
காளான் மற்றும் கோஸை நறுக்கி உப்பு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் காளான் , கோஸ் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு தூள்
வகைகள் சேர்க்கவும். தண்ணீர் விடாமல் காளான் சுருள வேகும் வரை வேகவிட்டு,
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.