Tuesday, December 17, 2013

வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு

 தேவையான பொருட்கள்:
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக கீறியது)
சிறிய உருளைக்கிழங்கு - 1/2 கிலோ 
வெந்தயக் கீரை - 250 கிராம் (நன்கு கழுவி நறுக்கியது)
 மல்லி தூள் - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
செய்முறை: 
முதலில் சிறிய உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்கி, தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வெந்தயக்கீரையை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் கீரை நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து, வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு தயார் .

கற்பூரவள்ளி டீ

 
 தேவையான பொருட்கள்: 
உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1 1/2 டீஸ்பூன் 
தண்ணீர் - 1 கப் 
தேன் - தேவையான அளவு 
 செய்முறை: 
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீரை கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் கற்பூரவள்ளி இலையைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த இலையை நீக்கி விட்டு, அதனை மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். பின் அதில் தேவையான அளவு தேனை சேர்த்து கலந்தால், சுவையான கற்பூரவள்ளி டீ தயார் .
குறிப்பு:
 உலர்ந்த கற்பூரவள்ளி இலையை அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் போதே போட வேண்டாம். இல்லாவிட்டால், அது டீயின் சுவையையே மாற்றிவிடும். ஒருவேளை உலர்ந்த கற்பூரவள்ளி இலை கிடைக்காவிட்டால், பச்சை இலையை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, தேன் சேர்த்து குடிக்கலாம்.
குளிர்ச்சியான வானிலையின் போது, நன்கு சூடாகவும், உடலுக்கு இதமாகவும் இருக்க டீ போட்டு குடித்தால் நன்றாக இருக்கும். அதிலும் சாதாரண பால் டீயை விட, மூலிகை டீ போட்டு குடித்தால், குளிர்ச்சியான வானிலையின் போது ஏற்படும் இருமல், சளி போன்றவை வராமல் இருக்கும். அதிலும் அக்காலத்தில் இருமலைப் போக்கப் பயன்படும் கற்பூரவள்ளியைக் கொண்டு டீ போட்டு குடித்தால், இன்னும் நன்றாக இருக்கும்.இருமலைப் போக்கும்.

கம்பு ஆலு ரொட்டி

தேவையான பொருட்கள்: 
 கம்பு மாவு - 2 கப் 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
 தேங்காய் - 1/2 கப் (துருவியது) 
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
 மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 1 கப் 
 செய்முறை: 
முதலில் ஒரு பௌலில் கம்பு மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய், மாங்காய் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், ஒவ்வொரு சப்பாத்திகளையும் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது சூப்பரான கம்பு ஆலு ரொட்டி ரெடி.இதனை அப்படியே சாப்பிடலாம்

Monday, October 28, 2013

ஆப்பிள் ரவா கேக்


தேவையானவை:  
துருவிய ஆப்பிள் - ஒரு கப், 
ரவை - அரை கப், 
சர்க்கரை - முக்கால் கப், 
நெய் - தேவையான அளவு, 
கிரீன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: 
வாணலியில் நெய் ஊற்றி, ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர், ரவையுடன் ஆப்பிள், சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

ஆவாரம் பூ சூப்

 ஆவாரம் பூ சூப் தேவை
ஈர ஆவாரம்பூ - 1 கப் (அ) உலர்ந்த பொடி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 250 மி.லி
கேரட் - 1
பீன்ஸ் - 5
தக்காளி - 1
வெங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி, புதினா - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை 
கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக்கலக்கவும். பிறகாய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.
உடலுக்கு வலிவு தரும் சூப் ஆவாரம் பூ சூப் ஆவாரம் பூ அழகை வர்ணிக்க ‘ஆவாரம் பூவே’ என்கிறோம்.
ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ.
உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.

பூசணிக்காய் ரோஸ்ட்



தேவையானவை:  
பூசணிக்காய் - ஒன்று,  
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், 
 குழம்பு மிளகாய் மசாலா - 4 டீஸ்பூன், 
எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன், 
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், 
கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, 
எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.  
செய்முறை: 
சின்ன பூசணிக்காயை வட்டமாகவோ, சதுரமாகவோ கொஞ்சம் பெரிய சைஸ் ஆக வெட்டி வைத்துக்கொள்ளவும்.  மஞ்சள்தூள், உப்பு,  குழம்பு மிளகாய் மசாலா, இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றாக கலக்கி வெட்டி வைத்த பூசணிக்காயில் தடவி சிறிது நேரம் வைத்து, பின் அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்து புரட்டவும்.
கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மைதா மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். இதில் மசாலாவில் ஊறிய பூசணிக்காயை முக்கி, ஆப்பச்சட்டியில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பிறகு திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் எடுத்து, நறுக்கிய மல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும். டேஸ்ட்டில் அசத்தும் இந்த ரோஸ்ட்!

பொங்கனம்



தேவையானவை:
 மிகுந்து போன இட்லி மாவு, 
கடுகு - ஒரு டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - இரண்டு, 
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
மைதா மாவு - ஒரு கைப்பிடி அளவு, 
தயிர் - 2 டீஸ்பூன், 
ரவை - 2 டீஸ்பூன், 
தண்ணீர், எண்ணெய், 
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 
 அடுப்பில் வாணலியை வைத்து, தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, மிகுந்து போன இட்லி மாவில் கொட்டி நன்கு கலக்குங்கள். பிறகு மைதா மாவு, தயிர், ரவை ஆகியவற்றை மாவோடு சேர்த்துக் கலக்கி, கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் சூடானதும், கரண்டியில் மாவை எடுத்து, ஓரளவுக்கு சின்னதாக ஊற்றுங்கள். எண்ணெய் விட்டு சுட்டெடுங்கள். தோசையின் நடுப்பக்கம் கெட்டியாகவும், அதன் ஓரங்கள் மொறுமொறுவென்றும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்... பொங்கனம் ரெடி.
காலையில் பொங்கனத்தை சாப்பிட்டு கொள்ளலாம். ஒருவேளை மதியமும் இதையே கொண்டு செல்ல விருப்பமாக இருந்தால், ஒரு பொங்கனத்தை வைத்து, அதன் மீது தோசை மிளகாய்ப்பொடியை நல்லெண்ணெய் கலந்து தடவிவிடுங்கள்.
இப்படி பொடி தடவிய தோசையின் மீது மற்றுமொரு தோசையை வைத்துவிடுங்கள். இறுதியாக வைக்கும் தோசையின் மீது கண்டிப்பாக நல்லெண்ணெயில் கலந்த பொடியை தடவ வேண்டும். மதியத்துக்கு அற்புதமாக இருக்கும் இந்த பொங்கனம்.

Saturday, October 26, 2013

சுரைக்காய் பஞ்சு, விதை துவையல்

 தேவையானவை:
சுரைக்காயின் விதையுடன்கூடிய நடுப்பகுதி - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்),
காய்ந்த மிளகாய் - 3,
புளி - கொட்டைப்பாக்கு அளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: 
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: 
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியே சிவக்க வறுக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, சுரைக்காய் நடுப்பகுதியைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். இதனுடன் வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், புளி, தக்காளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுத் தேவையான தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். சட்னியாக வேண்டுமானால்... மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

ஓமவல்லி துளசி லேகியம்




தேவையானவை:  
ஓமவல்லி இலை - 10, துளசி இலைகள், - 10, 
இஞ்சி - ஓர் அங்குல நீள துண்டு (சுத்தம் செய்து, தோல் நீக்கவும்), லவங்கம் - 3, 
நெய் - 2 டீஸ்பூன், 
மிளகு - 10, தேன் - 4 டீஸ்பூன்.
செய்முறை:  
மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடிக்கவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய்யை விட்டு சூடாக்கி... அரைத்த விழுது, பொடித்த பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆற வைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு உதவும்.

ஃபுல்காவுக்கு சைட் டிஷ் சப்ஜி


தேவையானவை:  
உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள் - கால் கிலோ. 
பெரிய வெங்காயம் - 2, 
தக்காளி - 2, 
பச்சை மிளகாய் - 2, 
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், 
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், 
தண்ணீர் - 2 டம்ளர், 
உப்பு - தேவையான அளவு, 
எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு.
செய்முறை:  
காய்கறிகள் எல்லாவற்றையும் கழுவி, நறுக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும், காய்கறிகளைப் போட்டு, அதனுடன் மிளகாய்ப்பொடி, தேவையான உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, தண்ணீர் விட்டு, குக்கரை மூடி 'சிம்’மில் வேக வைக்க வேண்டும். இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த காய்கறியில் இதைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

உருளைக்கிழங்கு அல்வா




தேவையானவை:  
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 200 கிராம், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், பால்கோவா - 50 கிராம், 
சர்க்கரை - 100 கிராம், 
வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு, 
நெய் - 100 கிராம், 
பச்சைக் கற்பூரம் (பொடித்தது) - துளி அளவு.
செய்முறை: 
சர்க்கரையில் சிறிது நீர்விட்டு காய்ச்சி... இளகி முத்து கொதி வருகையில் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்), மசித்த உருளைக்கிழங்கு, பால் கோவா உதிர்த்து சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்துக்கொண்டே கிளறவும். அல்வா பதம் வரும்போது மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, மீண்டும் கிளறி... வறுத்த முந்திரி, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம் சேர்த்தால்...  சப்புக் கொட்ட வைக்கும் சுவையில்  உருளைக்கிழங்குஅல்வா தயார்.

வெண்டைக்காய் கறி

தேவையானவை:  
வெண்டைக்காய் - கால் கிலோ, 
வெள்ளை மொச்சை - 150 கிராம், 
பழைய புளி - 50 கிராம், 
மாங்காய் - ஒன்று, 
சின்ன வெங்காயம் - 100 கிராம், 
தக்காளி - 100 கிராம்,  
பச்சை மிளகாய் - 100 கிராம், 
பெருங்காயம் - சிறிதளவு, 
கடுகு - 2 டீஸ்பூன், 
வெந்தயம் - அரை டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், 
 நல்லெண்ணெய் - 100 மில்லி, 
பூண்டு - 50 கிராம், 
காய்ந்த மிளகாய் - 5, 
மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், 
கறிவேப்பிலை, உப்பு - தேவையானஅளவு.
செய்முறை:  
முந்தைய நாள் இரவே மொச்சையை ஊற வைத்து, அடுத்த நாள் தண்ணீரை வடித்துவிடுங்கள். குக்கரில் மொச்சை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவிடுங்கள். பழைய புளியில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து ஒரு கப்பில் கரைத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காயை புளிக்குழம்புக்கு போடுவது போன்ற நீளத்துக்கு வெட்டி, வாணலியில் போட்டு எண்ணெய் விடாமல் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு மிதமான சூட்டில் வதக்க வேண்டும். ஓரளவு வதங்கும்போதே மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு,  பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் கரைத்து வைத்த புளித் தண்ணீர், வதக்கிய வெண்டைக்காய் மற்றும் வேக வைத்த மொச்சையை சேர்த்து 15 முதல் 20 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கினால்... வெண்டைக்காய் மண்டி ரெடி. மேலும் புளிப்புக்காக மாங்காயையும் நறுக்கி இதோடு சேர்த்துக் கொள்ளலாம். மொச்சை பிடிக்காதவர்கள், வெள்ளை கொண்டைக்கடலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேங்காய் கேரட் ஸ்வீட்




தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், 
ஓடு நீக்கி வெள்ளையாக துருவிய தேங்காய் - ஒரு கப், 
சர்க்கரை - 2 கப், 
நெய் - 100 கிராம், 
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: 
அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு... கேரட், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கிய பின் சர்க்கரை சேர்க்க... கலவை இளகும். இதை கை விடாது நன்கு கிளறி, கையில் ஒட்டாத பதத்துக்கு கலவை இறுகி வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி வில்லைகள் போடவும்.

Friday, October 25, 2013

தர்பூசணிப் பட்டை வற்றல்

தேவையானவை:
தர்பூசணி மேல் தோலை நீக்கி, உட்புற வெள்ளைப் பட்டை, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
 தர்பூசணியில் பிங்க் நிறத்தில் இருக்கும் சதைப்பகுதியை கத்தியால் வெட்டி தனியாக எடுத்து சாப்பிடவோ... ஜூஸ் செய்யவோ பயன்படுத்தலாம். வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியின் மேல் தோலை நீக்கி, இரண்டு அங்குல நீளமுள்ள துண்டுகளாக நறுக்கி, கொதிநீரில் 10 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து, வெயிலில் உலர்த்தி, நன்றாகக் காய்ந்ததும் பாட்டிலில் சேமிக்கவும். தேவைப்படும்போது, எண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம். மிகுந்த சுவையுடன் இருக்கும்.

முற்றல் முருங்கைக்காய் வடை

தேவையானவை: 
முற்றிய முருங்கைக்காய் - 10,
கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப்,
சோம்புத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி விழுது,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
அரிசி மாவு, நறுக்கிய பூண்டு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 
முருங்கைக்காய் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும், சதையை வழித்தெடுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல், அரைக்கவும். கடலைப்பருப்பை ஊற வைத்து, மசால் வடை பதத்தில் அரைக்கவும். இதனுடன் முருங்கை விழுது, (எண்ணெய் நீங்கலாக) மற்ற எல்லாவற்றையும் கலந்து சிறு வடைகளாகத் தட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடைகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சாக்லேட் பாதுஷா




தேவையானவை:  
மைதா மாவு - 150 கிராம், 
சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, 
 சர்க்கரை - 250 கிராம், 
பால் - ஒரு டீஸ்பூன், 
சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், 
எண்ணெய் - கால் கிலோ, 
நெய் - 2 டீஸ்பூன், 
கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், 
தயிர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
 சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து... மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் - சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல்  தூவி பரிமாறவும்.
குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.

ஆரஞ்சு கேக்




தேவையானவை:  
மைதா - 100 கிராம், 
கமலா ஆரஞ்சு சாறு - 50 மில்லி, சர்க்கரை - 100 கிராம், 
நெய் - 50 கிராம், 
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிதளவு.
செய்முறை: 
நெய்யை உருக்கி அதனுடன் மைதா, ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையில் கமலா ஆரஞ்சு சாறு சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மைதா கலவையை சேர்த்துக் கிளறவும். கலவை இறுகும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, சற்றே ஆறியபின் வில்லைகள் போடவும்.

இனிப்பு காராசேவ்


தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பொடித்த மிளகு - அரை டீஸ்பூன், சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு, பெருங் காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, சிறிதளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கவும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி காராசேவ் தட்டு (அ) பெரிய கண் ணுள்ள கேரட் துருவி கொண்டு காயும் எண்ணெயில் நன்கு தேய்த்து போட்டு, காராசேவுகளாக பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சர்க்கரை கரைந்து பாகு வரும்போது தொடர்ந்து வேகமாக கிளற, சர்க்கரை பனிபோல் பூத்து வரும். அப்போது பொரித்த காராசேவ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நன்கு புரட்ட... இனிப்புகாராசேவ் தயார்.

சேப்பங்கிழங்கு தேன் குழல்

தேவையானவை:  
சேப்பங்கிழங்கு - கால் கிலோ, 
காய்ந்த மிளகாய் - 10, 
அரிசி மாவு - 200 கிராம், 
பொட்டுக்கடலை மாவு - 200 கிராம், 
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:  
சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து காய்ந்த மிளகாய், தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசையவும். ஒரு கரண்டி எண்ணெயை சூடாக்கி மாவில் ஊற்றி கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, தேன் குழல் பிடியில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

தக்காளி பர்ஃபி


தேவையானவை:  
பெங்களூர் தக்காளி - 5, சர்க்கரை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், முந்திரி - ஒரு கைப்பிடி அளவு, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: 
 தக்காளிப்பழத்தை சுடுநீரில் போட்டு... தோல், விதை நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு தக்காளி விழுது, சர்க்கரை சேர்த்து வதக்கவும். பாதி வற்றியதும் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் பரவலாக போட்டு, சூடு ஆறும் முன்பு முந்திரிப் பருப்பை தூவி அழுத்தவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.

Friday, October 18, 2013

பைனாப்பிள் மோர் குழம்பு

தேவையானவை: 
சற்று புளித்த தயிர்- 1 கப்,
பைனாப்பிள் -1 துண்டு,
மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு -அரை டீஸ்பூன்,
உப்பு -தேவையான அளவு.
அரைக்க: 
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய்- 3,
இஞ்சி -ஒரு துண்டு,
சீரகம் -அரை டீஸ்பூன்.
செய்முறை: 
மோரை கடைந்து கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து வைத்து விட்டு மீதியை மோருடன் சேருங்கள். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பைனாப்பிளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு, எடுத்து வைத்திருக்கும் (அரைத்த) விழுது சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிட்டு இறக்குங்கள். பாதியளவு எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து, அதில் வேகவைத்த பைனாப்பிள், கரைத்த மோர் சேருங்கள். நன்கு கிளறிக்கொண்டே ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மீதமுள்ள எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை பொரித்து சேருங்கள்.

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்


தேவையானவை: 
பச்சரிசி மாவு - 2 கப்,
கோதுமை மாவு - அரை கப்,
வெல்லம் (பொடித்தது) - 3 கப்,
பல்லுபல்லாக நறுக்கிய தேங்காய் - கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்,
நன்கு பழுத்த பூவன் வாழைப்பழம் - 1,
நெய் - சிறிதளவு,
எண்ணெய்-சிறிதளவு,
ஆப்பசோடா - கால் டீஸ்பூன்.
 செய்முறை: 
அரிசி மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். சிறிதளவு நெய்யில் தேங்காயை சிவக்க வறுத்து அதனுடன் சேருங்கள். வாழைப்பழத்தை தோலுரித்து மிக்ஸியில் அடித்து மாவுக்கலவையில் ஊற்றுங்கள். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும், வடிகட்டி சூடாக மாவில் ஊற்றுங்கள். அத்துடன் ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். குழிப்பணியார சட்டியைக் காயவைத்து ஒவ்வொரு குழிக்கும் சிறிது எண்ணெய், நெய் கலந்து ஊற்றி, முக்கால் குழிக்கு மாவை ஊற்றி, சிறு தீயில் வைத்து, மூடி போட்டு நன்கு வேக விட்டு திருப்பிவிடுங்கள். நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். பஞ்சு போன்றிருக்கும் இந்தப் பணியாரம், கேரள விருந்தில் இடம்பெறும் முக்கியமான இனிப்பு. அப்பம் இல்லாத பண்டிகையும் அங்கே இல்லை.

இஞ்சி குழம்பு

தேவையான பொருட்கள்: இஞ்சி - 50 கிராம்
மிளகாய் வற்றல் – 8
சின்ன வெங்காயம் - 18
முழுப் பூண்டு - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 4 தேக்கரண்டி
தக்காளி - 2
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 5 தேக்கரண்டி
புளி - சின்ன எலுமிச்சை அளவு
உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் இஞ்சி போட்டு வதக்கி எடுக்க வேண்டும். அதே பாத்திரத்தில் மிளகாய் வற்றல் வறுத்து எடுக்க வேண்டும். பின் 3 கொத்து கறிவேப்பிலை போட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியாக மல்லி தூள் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். இவற்றை ஒன்றாக மிக்சியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.
புளியை கரைத்து வைக்க வேண்டும். வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்க வேண்டும். மிச்சம் உள்ள எண்ணெயை வாணலியில் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதில் புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து எண்ணெய் திரண்டதும் இறக்கி வைக்க வேண்டும்.

கத்திரிக்காய் துவையல்

தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – 250 கிராம் 
வெங்காயம் – 1 
பச்சை மிளகாய் – 2 சீ
ரகம் – 1 தே.கரண்டி 
கொத்தமல்லி – ¼ கப் 
கருவேப்பில்லை – 4 இலை 
எண்ணெய் – தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு 
புளி – சிறிய கோலி அளவு  
செய்முறை
முதலில் கத்திரிக்காயினை சிறிய சிறிய தூண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் , கொத்தமல்லியைம் பொடியாக வெட்டி வைக்க வேண்டும். நாண் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பிறகு வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு அத்துடன் சிறிது புளியினை வெட்டி போட வேண்டும். தீயினைக் குறைத்து மூடி வேகவிட வேண்டும். நன்றாக வெந்த பிறகு கரண்டியால் நன்றாக மசித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து கிளறி பரிமாற வேண்டும்.

கத்திரிக்காய் மசாலா

தேவையான பொருட்கள் கத்திரிக்காய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா தூள் - 3/4 தேக்கரண்டி எ
ண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - 4 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
செய்முறை
கத்திரிக்காயை நீளமாக வெட்டி வைக்க வேண்டும். அரைக்க வேண்டியதை நைசாக அரைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும். இதில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேக விட வேண்டும். காய் வெந்ததும் திறந்து வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

பரங்கி விதை பாயசம்

தேவையானவை: 
காய வைத்து உரித்த பரங்கி விதை - ஒரு கப்,
கசகசா - 3 டேபிள்ஸ்பூன்,
பால் - சிறிதளவு,
தேங்காய்ப்பால் - 3 கப் (முழு தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் எடுத்து தனித்தனியே 3 கப்களில் வைக்கவும்),
சர்க்கரை - கால் கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு - தலா 20 கிராம்,
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
 செய்முறை: 
கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து, பாலில் ஊற வைத்து, விழுதாக அரைக்கவும். பரங்கி விதைகளைக் காய வைத்து உரித்து (பெரிய கடைகளில் பாலிஷ் செய்து ரெடிமேடாகவும் கிடைக்கும்), சிறிது பாலை விட்டு விழுதாக அரைக்கவும். தேங்காயின் மூன்றாம் பாலை ஒரு கடாயில் ஊற்றி... அரைத்த கசகசா, பரங்கி விதை விழுதுகளைப் போட்டுக் கை விடாமல் கலக்கி, இரண்டாம் பாலையும் சேர்க்கவும். தேவையானால் வெந்நீர் சேர்க்கலாம். நன்றாகக் கொதித்ததும், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, முதல் பாலைச் சேர்த்து கிளறி, எசன்ஸ் போட்டு இறக்கவும். முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொட்டவும்.

நெல்லிக்காய் அல்வா


  தேவையானவை: 
நெல்லிக்காய் (வேகவைத்து மசித்தது) - ஒரு கப்,
துருவிய வெல்லம்-ஒன்றரை கப்,
முந்திரி - 10,
 பாதாம் - 10,
நெய் -கால் கப்,
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: 
நெல்லிக்காயை கழுவி, சுத்தம் செய்து குக்கரில் வேகவைத்து கொட்டைகளை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி, அதனுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு மை போல் அரைக்கவும். நெல்லிக்காய் விழுதுடன் முந்திரி , பாதாம் கலவையைக் கலந்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெல்லம் கம்பிப்பாகு பதத்தில் வந்ததும், அரைத்த கலவையை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறவும். இடையிடையே நெய் சேர்க்கவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து அல்வா பதம் வரும்வரை கிளறவும். உலர் பழங்கள் அல்லது முந்திரி, அக்ரூட் பழங்களால் அலங்கரிக்கவும். சுவையான சத்தான நெல்லிக்காய் அல்வா ரெடி! நெல்லிக்காய் அல்வா: வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையும், சிறிது குங்குமப்பூவும் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

கேரட் தோல் கீர்

 தேவையானவை: 
கேரட் தோல் துண்டுகள் - ஒரு கப்,
பால் - 2 டம்ளர்,
பாதாம் மிக்ஸ் - அரை கப்,
சர்க்கரை - கால் கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
முந்திரி, திராட்சை - தலா 30 கிராம்.
 செய்முறை: 
கேரட்டை நன்றாக சுத்தம் செய்து, அதன் தோலை சீவி எடுக்கவும். உப்பு கரைத்த வெந்நீரில் அதை ஊற வைத்து, கழுவி நறுக்கவும். கடாயில் சிறிது பால் ஊற்றி, கேரட் தோலை அதில் வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேறு கடாயில் மீதமுள்ள பாலை ஊற்றி, கேரட் தோல் விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் பாதாம் மிக்ஸை கரைத்து ஊற்றி, சர்க்கரை சேர்த்து, கொதித்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் பாதாம் எசன்ஸ் சில சொட்டுகள் சேர்க்கலாம்.

பீட்ரூட் தோல் அல்வா

 தேவையானவை: 
பீட்ரூட் தோல் துண்டுகள் - 2 கப்,
இனிப்பில்லாத கோவா - அரை கப்,
சர்க்கரை - ஒரு கப்,
நெய் - கால் கப்,
ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், பாலில் கரைத்த குங்குமப்பூ - தலா அரை டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு - தலா 20 கிராம்.
செய்முறை: 
பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து, புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கர் தட்டில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும், இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கடாயில் போட்டுக் கிளறவும். நீர் வற்றியதும், பாதி அளவு நெய் விட்டு கோவாவை உதிர்த்துச் சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும்... ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, பாலில் கரைத்த குங்குமப்பூவைக் கலந்து இறக்கவும். வறுத்த முந்திரி, திரட்சை, சாரைப்பருப்பை போட்டு, மீதமுள்ள நெய்யை விட்டு கலக்கவும்.

நெல்லிக்கொட்டை டீ

 தேவையானவை: 
நெல்லிக்கொட்டை - அரை கப்,
புதினா, துளசி இலை - தலா 15,
கருப்பட்டி - தேவையான அளவு,
சுக்கு - சிறு துண்டு.
செய்முறை: 
நெல்லிக்கொட்டைகளை நன்றாக உடைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி நெல்லிக்கொட்டைகளைப் போட்டு கொதிக்கவிடவும். சுக்கை தட்டிப் போட்டு, துளசி இலை, புதினா, கருப்பட்டி சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி வெதுவெதுப்பாக அருந்தவும். இந்த டீ, மழை காலத்தில் அருந்த சூப்பராக இருக்கும். சளி, இருமல் வராமலும் தடுக்கும்.

உப்புமா


தேவையானவை : 
ரவை - 1 சிறிய டம்ளர் (1 ஆளுக்கு) பெரிய வெங்காயம் - 1ல் பாதி
 மிளகாய் - 2 
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - கொஞ்சம்
 செய்முறை : 
1. ரவையை வாணலியில் போட்டு கொஞ்சம் பொன்னிறமாக வரும்படி நன்றாக வறுத்துக் கொள்ளவும். 2. வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். 3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். 4. வதக்கிய வெங்காயத்துடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். அப்படியே உப்பையும் சேர்த்துக் கொள்ளவும். 5. பின் வறுத்த ரவையை அதில் சேர்த்து விடாமல் கிண்டவும். 5 நிமிடம் கழித்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்

கேப்பை புட்டு மாவு

 தேவையான பொருட்கள்:  
கேப்பை மாவு - ஒரு கப், 
பனங்கற்கண்டு - 50 கிராம், 
முற்றிய தேங்காய் - பாதி, 
மிளகுத் தூள் - ஒன்றரை ஸ்பூன், 
சித்தரத்தை - அரை ஸ்பூன், 
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன், 
உப்பு - சிறிதளவு.
செய்முறை: 
கேப்பை மாவில் சிறிது உப்பு சேர்த்துப் புட்டுக்கு, பிசைவதுபோல் பிசையவும். வெறும் கடாயில் பிசைந்த மாவைப் போட்டு வறுக்கவும். மாவு லேசாக வறுபட்டதும், நல்லெண்ணெய் சேர்த்து வறுத்து, துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு கிளறவும். நல்ல வாசனை வந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத் தூள், சித்தரத்தை சேர்த்துக் கிளறி சூடாகச் சாப்பிடவும். மழைக்காலத்துக்கு ஏற்ற சிறந்த சிற்றுண்டி இது.
  கேழ்வரகில் கால்ஷியம் இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது.  இரும்புச் சத்தும் உள்ளதால் ரத்தசோகையைத் தடுக்கும். ஆஸ்துமா பிரச்னை தீரும். சித்தரத்தை, மிளகு சேர்ப்பதால், சளியைக் குணமாக்கும்.  உடல் உஷ்ணத்தைச் சம நிலையில் வைத்திருக்கும். ''இந்தப் புட்டு மாவை, சூடாகச் சாப்பிட்டால் தும்மல், மார்புச் சளி பிரச்னைகூட இருந்த இடம் தெரியாமல் பறந்து போகும்''

Wednesday, October 16, 2013

எள்ளுமா உருண்டை


  தேவையானவை: 
வெள்ளை எள் & ஒரு கப்,
வெள்ளை உளுந்து & அரை கப்,
சர்க்கரை & முக்கால் கப்.
செய்முறை: 
எள், உளுந்து இரண்டையும் தனித்தனியே வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடி செய்து, மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பிறகு கொதி நீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறி உருண்டை களாகப் பிடிக்கவும். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. ருசியும் சத்தும் நிறைந்தது.
 எள்ளுமா உருண்டை: வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து கலவையில் போட்டு உருண்டைகள் பிடித்தால் கூடுதல் சுவையோடு இருக்கும்

பாப்கார்ன் ஸ்வீட் பால்ஸ்


தேவையானவை:  
பொரித்த பாப்கார்ன், ஜெம்ஸ், அரிசி மிட்டாய் - தலா ஒரு சிறிய பாக்கெட், உலர் திராட்சை - 10 அல்லது 15, வறுத்த முந்திரி - 10 (சிறியதாக பொடித்துக்கொள்ளவும்), பாதாம்பருப்பு - 10 (ஒன்றிரண்டாக உடைக்கவும்), கொட்டை நீக்கிய பேரீச்சை துண்டுகள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: 
 வெல்லத்தை நீரில் கரைத்து வடி கட்டி, அடுப்பில் வைத்து, கெட்டிப் பாகாகக் காய்ச்ச வும். இதனுடன் நெய்யை விட்டுக் கலக்கி, ஏலக் காய்த்தூள் சேர்க்கவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு நன் றாகக் கலந்து... பிறகு, வெல்லப்பாகை பரவலாக ஊற்றி நன்கு கிளறி, உருண்டைகளாக உருட்டவும்.

சத்தான வறு பயறு

 தேவையானவை: 
கொண்டைக் கடலை - 50 கிராம்
கறுப்பு உளுந்து (தோல் நீக்காதது) - 50
கடலைப் பருப்பு - 50 .
பச்சைப் பயறு - 50
சோயா பீன்ஸ் - 50 .
கொள்ளு - 50 .
 தட்டைப் பயறு - 50 .
மைசூர்ப் பருப்பு - 50 .
பச்சை வேர்க்கடலை - 100 .
பொட்டுக் கடலை (உடைத்த கடலை) - 100
வறுத்துப் பொடித்த மிளகுத்தூள் 4 தே.க.. (அல்லது தேவைப்படி) உப்புப் பொடி - தேவைப்படி
பெருங்காயப் பொடி - 3 தே.க.
செய்முறை: 
வேர்க்கடலையையும் பொட்டுக் கடலையையும் தனித் தனியாக வறுக்கவும். வேர்க்கடலையின் தோலை நீக்கிவிடவும். கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, சோயா பீன்ஸ், கொள்ளு, தட்டைப்பயறு, மைசூர்ப்பருப்பு ஆகியவற்றைத் தனித் தனியாய்க் களைந்த பின் தண்ணீரில் ஊற வைக்கவும். நசுங்குகிற பதத்துக்கு இவை நன்றாக ஊறியதும். தனித் தனியாக வடியவைத்துத் தண்ணீர் முற்றாக வடிந்ததும் உப்புப்பொடியும் மிளகுத் தூளும் போட்டுப் பிசிறி, காயவைக்கவும். பிறகு இவற்றைத் தனித்தனியாய்க் கடாயில் (என்¦ணெய் இல்லாமல்) வறுத்து எடுக்கவும். ஈரம் முழுவதும் போன பிறகு வறுத்தால்தான் விரைவாக வறுபடும். இல்லாவிட்டால், பொறுமை இழந்து எடுக்க நேர்ந்து கரப்பாக இருப்பதற்குப் பதிலாக அவை மெதுவடை மாதிரி மெத்து மெத்தென்றாகிவிடும். கொஞ்சமாகக் கடாயில் போட்டு வறுத்துப் பார்த்த பின் மீதியை வறுக்கவும். மொத்தமாய் வறுக்க வேண்டாம். பின்னர், கடைகளில் விற்கும் கார்ன் ·ப்ளேக்ஸ் கொஞ்சத்தையும் சேர்த்தால் சுவை கூடும். மிளகுப் பொடியே செரிமானத்துக்கு உகந்தது. மிளகாய்ப் பொடி வேண்டாம். பிறகு எல்லாவற்றையும் நன்றாய்க் கலந்து பெருங்காயத் தூளையும் போட்டுப் பிசிறவும்.(கடைகளில் முளை கட்டிய பயறுகள் இப்போதெல்லாம் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி அப்படியே வறுத்தும் இதைச் செய்யலாம். அதிகச் சத்துள்ளது.

சாம்பார் சாதம்

தேவையான பொருள்கள்: 
பச்சரிசி- 2 கப்
துவரம்பருப்பு- 1 கப்
வெங்காயம்-1
சின்ன வெங்காயம்- 1 கை
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
கீறிய பச்சை மிளகாய்-4
பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்
சிறிய பிஞ்சு கத்தரிக்காய்-4
புளி- 2 நெல்லிக்காயளவு
தேவையான உப்பு
எண்ணெய்-3 மேசைக்கரண்டி
நெய்- 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- சில இலைகள்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
உருளைக்கிழங்கு [ சற்று பெரியது]-1
காரட் [ சற்று பெரியது]-1
பொன்னிறமாக கால் ஸ்பூன் எண்ணெயில் வறுத்துப்பொடிக்க வேண்டிய பொருள்கள்:
வெந்தயம்- 1 ஸ்பூன், கடுகு- அரை ஸ்பூன், மிளகாய் வற்றல்-8, தனியா விதை- 4 ஸ்பூன், கடலைப்பருப்பு- 2 ஸ்பூன், பொட்டுக்கடலை- 2 ஸ்பூன், மிளகு- 8, பெருங்காயம்- 2 பட்டாணியளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு, காரட்டை சற்று பெரிய துருவலாக துருவிக்கொள்ளவும்.வறுப்பதற்கான சாமான்களை வறுப்பதற்கு முன், கால் ஸ்பூன் எண்ணெயில் முதலில் பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு மற்ற சாமான்களை வறுத்தெடுத்து அதன் பின் பொடிக்கவும்.அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி, 6 கப் நீர் ஊற்றி குக்கரில் 6 விசில் வரை நன்கு வேகவைக்கவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.எண்ணெயை ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.நன்கு வதங்கியதும் தக்காளியையும் கொத்தமல்லி, சிறிய துண்டுகளாய் அரிந்த கத்தரிக்காய்கள் இவற்றைப்போட்டு மஞ்சள் தூளும் சேர்த்து கறிவேப்பிலையும் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து மசியும் வரை நன்கு வதக்கவும்.அதன் பின் காரட், உருளைத்துருவல்கள் சேர்த்து ஒடு பிரட்டு பிரட்டவும்.புளியைக்கரைத்து ஊற்றி சிறிது உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.மசாலா சற்று கெட்டியானதும் வெந்த சாதம், உருக்கிய நெய் சேர்த்து, போதுமான உப்பும் சேர்த்து, குறைந்த தீயில் அனைத்தும் சேரும் வரை ஐந்து நிமிடங்கள் கிளறவும்.கமகமக்கும் சாம்பார் சாதம் தயார்!!
இதற்கு தொட்டுக்கொள்ளவென்று தனியாக எதுவும் தேவையில்லை. அருமையான ஊறுகாய், அப்பளம், வற்றல்கள் போதும். 

கேரட் கீர்


தேவையான பொருட்கள் :
பால் - ஒரு லிட்டர்,
துருவிய கேரட் - 11/2 கப்,
சர்க்கரை - ஒரு கப்,
மெல்லிய ரவை - 3 டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு - சிறிது,
குங்குமப்பூ - சிறிது.
செய்முறை : 
துருவிய கேரட்டை பாலில் நன்கு மென்மையாகும் வரை வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறி விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து ரவையை கட்டி தட்டாதபடி, பாலுடன் கலக்கவும். இத்துடன் முந்திரிப் பருப்பைச் சேர்த்துக் கலவை திக்காகும் வரை கொதிக்க விடவும். பிறகு சிறிது இளஞ்சூடான பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, இறக்கும்முன் சேர்க்கவும். இதனைக் குளிர வைத்து பரிமாறவும்

நெல்லிக்காய் சூப்


நெல்லிக்காய் விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும். 
தேவை நெல்லிக்காயை வேகவைத்த தண்ணீர் - 4 கப் கார்ன் ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு செய்முறை பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்

சாக்லெட் பூரி



தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1½ கப்,
மைதா - ஒரு கப்,
நெய் -½ கப்,
சாக்லேட் சாஸ் - ½ கப்,
நெய் (பொரிக்க) - ½ கப்
செய்முறை: 
மைதாவையும் கோதுமை மாவையும், ½ கப் நெய் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு சாக்லேட் சாஸை கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி நன்கு பிசையுங்கள். மாவு மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. தண்ணியாகவும் இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் மாவோடு சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். பிசைந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, பூரிகளாகத் தேய்த்து, வாணலியில் நெய்யை நன்கு சூடாக்கி அதில் தேய்த்த பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் பூரி வகை இது

எலும்பு சூப்


தேவையானப் பொருட்கள்: 
 ஆட்டு எலும்புகறி- 1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)
 தக்காளி- 1/4 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்) பச்சை மிளகாய் - 2
அரைக்க:-
இஞ்சி - 10 கிராம் ,
பூண்டு - 10 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்),
மிளகு தூள் - 2 டீஸ்பூன், சீரகதூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை - 1/2 கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்) ,
நெய் - 50 கிராம் ,
ரொட்டித்தூள்- சிறிதளவு,
எலுமிச்சம்பழம் - 1/2 (சாறு எடுக்கவும்),
 சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: 
தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி சேர்த்து சூப்பை இறக்கவும். பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். (கார்ன் மாவும் உபயோகிக்கலாம்) பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்.

கோபி தோசை


 தேவையான பொருட்கள் : 
 காலி பிளவர் 2 பெரிய கப்,
கடலை மாவு ஒரு கப்,
உப்பு, மி.தூள் தேவையான அளவு, எண்ணெய் அல்லது நெய்,
ஜீரகம் -1 ஸ்பூன்
கொத்துமல்லித்தழை,
கறிவேப்பிலை,
பெருங்காயப் பொடி.
செய்முறை : 
கடலை மாவை சுத்தம் செய்து அதில் பொடியாக நறுக்கிய காலி பிளவர் உப்பு, மி.தூள், பெருங்காயப் பொடி, ஜீரகம், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை இவற்றைப் போட்டு தோசை மாவு பதத்தில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லைக் காய வைத்து ஒரு கரண்டி மாவு ஊற்றி லேசாகத் தேய்க்கவும் மேலே ஒரு கரண்டி நெய்விட்டு மெல்லிய தீயில் வேகவிட்டுத் திருப்பிப் போடவும் இன்னும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி பொன்னிறமாக முறுகலாக வெந்ததும் எடுங்கள். சுடச்சுட தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியுடன் பரிமாறுங்கள்

சிக்கன் கறி


  தேவையான பொருட்கள் : 
சிக்கன் - ½ கிலோ,
சிக்கன் மசாலா - 1 பாக்கெட்,
காய்ந்த மிளகாய் - 15,
இஞ்சி -10 கிராம்,
பூண்டு - 10 பல்,
தக்காளி - 4,
வெங்காயம் - 2 சிறியது, நல்லெண்ணெய் - 200 கிராம்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க : 
கடுகு,
சீரகம்,
உளுத்தம்பருப்பு,
புதினா, கறிவேப்பிலை தேவையான அளவு  
செய்முறை :
 தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றைத் தனித்தனியாக மைய அரைத்துக் கொள்ளவும். சிக்கனைச் சுத்தப்படுத்தி, அதில் சிக்கன் மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி ¼ மணி நேரம் வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, தக்காளி, வெங்காய விழுதைப் போட்டு நன்கு கிளறவும். புதினாவை சேர்த்து, அதோடு ஊற வைத்த சிக்கன், இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டுக் கிளறவும். அதோடு காய்ந்த மிளகாயை இரண்டு இரண்டாகக் கிள்ளிப் போட்டு நன்கு கிளறவும். நன்கு வெந்தவுடன் இறக்கி வைக்கவும். வேறு கடாயில் மீதி எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து சிக்கனில் சேர்க்கவும். காரம் தேவையெனில் மிளகுத்தூள் சேர்க்கலாம்

இஞ்சி பூண்டு பேஸ்ட்


இது சமையல் காரர்கள் பிரியாணி மற்றும் பகாறா காணாவிற்கு மற்றும் பல இஸ்லாமிய அயிட்டங்களுக்கு செய்யும் போது அரைக்கும் இஞ்சி பூண்டின் அளவு
தேவையான பொருட்கள்
இஞ்சி - ஒரு கிலோ
பூண்டு - அரை கிலோ
எண்ணை (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசை கரண்டி
செய்முறை 
முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தி அல்லது சின குழவியால் இடித்து கொள்ளுங்கள்.பிறகு குப்பை கொட்டும் இடத்தில் வைத்து லேசா புடைத்தால் அவ்வளவு பூண்டு குப்பையும் அதில் போய் விடும் இல்லை என்றால் வீடு முழுவது பூண்டு குப்பைதான்.. இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவி பிறகு பொடியாக வெட்டனும். பூண்டையும் அரிந்து கழுவி கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் கொஞ்ச கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைத்தெடுத்து அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணை கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு கண்டெயினரில் போட்டு பீரீஜரில் வைத்து விடுங்கள். பீரிஜரில் வைக்கும் போது முழுவது அடைத்து வைக்காதீர்கள்.வெடித்து வெளியே வந்துவிடும். மீதியை கிழே பிரிட்ஜில் வைத்து தினமும் தேவைக்கு பயன் படுத்தலாம்.

Saturday, October 12, 2013

மாங்காய்ச் சட்டினி

 தேவைப்படுபவை:
தோல் சீவப்பட்ட மாங்காயின் துருவல் - ஒரு கிண்ணம்
 தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்
மிளகாய் வற்றல் - 8 அல்ல்து 10
பெருங்காயப் பொடி - 1 தே. க.
உப்பு - 2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி
இவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் மின் அம்மியில் மசித்துக் கடுகு மட்டும் தாளிக்கவும்.

தனித் தேங்காய்ச் சட்டினி

  தேவைப்படும் பொருள்கள்:
முற்றலான தேங்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - 5 அல்லது 6 (அல்லது தேவைக்கேற்ப)
உப்பு - 1 தேக்கரண்டி
 ( பெருப்க்காயப் பொடி / கரைசல் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 / 4 தேக்கரண்டி
 உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள்
எண்ணெய் - தாளிக்கச் சிறிதளவு
 முதலில் தேங்காயைத் துருவிக்கொள்ளவும். இந்தத் துருவல், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து மசிக்கவும். மின் அம்மியியில் முதலில் பச்சடி மிளகாயைப் போட்டு அதன் மேல் தேங்காய்த் துருவலைப் போடுவது நல்லது. இல்லாவிட்டால், மிளகாய் மசியாது. சிலர் புளிச்சுவைக்காக ஒரு கோலியளவு புளி சேர்த்து அரைப்பார்கள். புளி ஆகாதவர்கள் - அல்லது வேண்டாம் என்று நினைப்பவர்கள் - சட்டினியை அரைத்து முடித்த பிறகு அதில் தேவைக்கேற்ப எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொள்ளலாம். அல்லது தயிரும் சேர்க்கலாம். சில பச்சை மிளகாய்கள் அதிகமாய்க் காரும். அப்போது சட்டினியில் தயிரைச் சேர்ப்பது காரம் குறைய உதவும். கடைசியாகக் கறிவேப்பிலைகளைக் கிள்ளிப் போடவும். தேங்காய்ச் சட்டினியை அதிக நேரம் பாதுகாக்க முடியாது. ·ப்ரிட்ஜில் கூட ரொம்ப நேரத்துக்குச் சுவை குன்றாமல் இருக்காது. எனவே 3, 4 மணி நேரத்துக்குள் செலவழிப்பது நல்லது.

பாகற்காய் ஊறுகாய்

 தேவையான பொருட்கள்: 
பாகற்காய் - 1 கிலோ,
 மிளகுப் பொடி - 100 கிராம், 
கடுகு - 50 கிராம், 
வெந்தயம், மஞ்சள் பொடி - தலா 25 கிராம், 
உப்பு - 150 கிராம், 
பெருங்காயப் பொடி - 10 கிராம், 
எலுமிச்சம் பழம் - 12, 
நல்லெண்ணெய் - 100 கிராம். 
செய்முறை: 
பாகற்காயை தண்ணீர் விட்டுக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, வட்ட வில்லைகளாக நறுக்கவும். கடுகு, வெந்தயத்தைத் தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்து, பொடி செய்யவும். ஜாடியில் பாகற்காய் வில்லைகளைப் போட்டு, உப்புப் பொடி, மஞ்சள் பொடி, மிளகுப் பொடி, கடுகு, வெந்தயப் பொடி எல்லாவற்றையும் சேர்க்கவும். நல்லெண்ணையைக் காய்ச்சி ஜாடியில் ஊற்றவும். சிறிது ஆறிய பின்பு, எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கவும். நான்கு நாட்களில் ஊறி விடும். எலுமிச்சம் பழம் சேர்ப்பதால், பாகற்காயின் கசப்பு தெரியாது. 
 குறிப்பு: 
இது நீரிழிவு நோய்க்காரர்களுக்கு மிகவும் நல்லது. இதைத் தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

டபுள் கா மிட்டாய்




தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, மில்க்மெய்டு - ஒரு டின், குங்குமப்பூ - ஒரு கிராம், பாதாம், பிஸ்தா, முந்திரி (சேர்த்து) - 50 கிராம், சர்க்கரை - 200 கிராம், பால் - ஒன்றரை லிட்டர், சர்க்கரைப்பாகு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை லிட்டர்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி,  நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மில்க்மெய்டு ஊற்றி நன்கு கலக்கவும். குங்குமப்பூவையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பிரெட் ஸ்லைஸ்களை முக்கோண வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.  பாத்திரத்தில் பொரித்த பிரெட் ஸ்லைஸ்களை அடுக்கி அதன் மேல் முதலில் சர்க்கரைப்பாகை ஊற்றவும். பிறகு, பால் கலவையை ஊற்றவும். அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனதும் மேலே பொடியாக நறுக்கிய முந்திரி, பாதம், பிஸ்தாவை தூவி, துண்டுகளாக்கி பரிமாறவும்.

சின்ன வெங்காய ஊறுகாய்

  தேவையான பொருட்கள்: 
சின்ன (சாம்பார்) வெங்காயம் - 1 கிலோ, 
வினிகர் (சிவப்பு நிறம்) - 500 மி.லி, 
உப்பு - 150 கிராம், 
மிளகாய்த் தூள் - 100 கிராம். 
செய்முறை: 
வெங்காயத்தைத் தோலுரித்து, சுத்தம் செய்து கொள்ளவும். ஜாடியில் வினிகரைக் கொட்டி, அதில் வெங்காயம், மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். வெங்காயம் வினிகரில் ஊறி, ஒரு வாரம் கழித்து சாப்பிட ருசியாக இருக்கும். குறிப்பு: இது தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும். ஸ்டார் ஹோட்டல்களில் இந்த ஊறுகாயை டேபிள் மீது வைத்திருப்பார்கள்.

ரைஸ் ரோல்ஸ்




தேவையானவை: சாதம் - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து ரோல்களாக செய்யவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, ரோல்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மலபார் பரோட்டா




தேவையானவை: மைதா மாவு - அரை கிலோ, முட்டை (விருப்பப்பட்டால்) - ஒன்று, பால் - 100 மில்லி, தயிர் - 50 மில்லி, தூள் உப்பு, சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சர்க்கரை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதில் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, சிறிது மாவை எடுத்து உருண்டையாக செய்து, தட்டி, இரண்டு கைகளிலும் வீசி, மடித்து மீண்டும் தட்டி... தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும். பிறகு, அதனை கைகளில் வைத்து அடித்து பரிமாறவும்.

கடப்பா

தேவையானவை: 
பயத்தம்பருப்பு - 100 கிராம் (வேக வைத்துக் கொள்ளுங்கள்), 
பொட்டுக்கடலை (வறுகடலை, உடைத்த கடலை) - 50 கிராம், 
சோம்பு - 25 கிராம், 
பட்டை - 10 கிராம், 
கசகசா - 20 கிராம், 
வனஸ்பதி - 50 கிராம், 
சின்ன வெங்காயம் - 200 கிராம், 
தக்காளி - 100 கிராம், 
பச்சை மிளகாய் - 50 கிராம், 
பூண்டு - 50 கிராம், 
இஞ்சி - 25 கிராம், 
கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை - தலா 2, 
தேங்காய் - ஒரு மூடி, 
கேரட் - 2 (வட்டமாக ஸ்லைஸ் செய்து கொள்ளவும்), 
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு. 
எலுமிச்சம்பழம் - ஒன்று, 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்துக் கொள்ளவும்), 
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  
பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் இரண்டையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளுங்கள். இதனு டன் கசகசா, தேங்காய், 10 கிராம் சோம்பு, 30 கிராம் பூண்டு, 25 கிராம் இஞ்சி சேர்த்து ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் பட்டை, சோம்பு, பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி, வனஸ்பதி முழுவதையும் ஊற்றுங்கள். சூடா னதும் கிராம்பு, ஏலக்காய், அன் னாசி பூ, ப¤ரிஞ்சி இலையுடன், இடித்து வைத்துள்ள பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து வதக்குங் கள். நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங் கள். அரை லிட்டருக்கு மேலாக தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும், கேரட் ஸ்லைஸ், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து வரும்போது, வேக வைத்த பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மறுபடியும் கொதிக்கவிடுங்கள். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும்... கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலைகளைத் தூவி, எலுமிச்சைச் சாறு விட்டு இறக்கவும். பின்பு, வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து குழம்பில் தூவி, கரண்டியால் கலக்கிவிடுங்கள்.
இட்லி, தோசைக்கு ஏற்ற வித்தியாசமான குழம்பு இது.

தக்காளி ஊறுகாய்

  தேவையான பொருட்கள்: 
பழுத்த கெட்டித் தக்காளி - 2 கிலோ, 
உப்பு - கால் கிலோ, 
மஞ்சள் பொடி, வெந்தயப்பொடி - தலா 50 கிராம், 
மிளகாய்ப் பொடி - 200 கிராம். 
செய்முறை: 
தக்காளியை நன்றாகக் கழுவி, துணியால் ஈரமில்லாது துடைக்கவும். உப்புப் பொடி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடியை கலந்து கொள்ளவும். தக்காளியைப் பிளந்து, இந்தக் கலவையை நடுவில் அடைத்து, தாம்பாளத்தில் அடுக்கவும். இதை நான்கு நாட்கள் நன்றாக வெயிலில் வைத்து, பின் ஜாடியில் வைத்து, மூடி விடவும். எண்ணெய் இல்லாமல் செய்யும் இந்த ஊறுகாய், வெயிலில் நன்றாகச் சுருங்கி ஈரமில்லாது இருக்கும். இது 3 மாதம் வரை கெட்டுப் போகாது.
 குறிப்பு:
 தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

புளி - பச்சை மிளகாய் ஊறுகாய்

 தேவையான பொருட்கள்:
 பச்சை மிளகாய், உப்பு - தலா அரை கிலோ,
 புளி - 200 கிராம், 
கடுகு, எள் - தலா 100 கிராம், 
வெந்தயம், மஞ்சள் பொடி - தலா 50 கிராம்,
 நல்லெண்ணெய் - கால் கிலோ,
 தண்ணீர் - கால் லிட்டர். 
செய்முறை: 
பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி, உப்பை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கடுகு, வெந்தயம், எள் மூன்றையும், வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும். எண்ணெயை கடாயில் விட்டு பச்சை மிளகாய்களை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு புளி, உப்பு ஊற வைத்ததைப் பிசைந்து வடிகட்டி, மஞ்சள் பொடி போட்டு, இதில் ஊற்றவும். புளிக் காய்ச்சல் போன்று எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை கொதிக்க வைத்து, கீழே இறக்கி, இதனுடன் கடுகு, எள், வெந்தயப் பொடியைக் கலக்கவும். ஜாடிகளில் போட்டு ஆறிய பின்பு மூடி வைக்கவும். குறிப்பு: இது 6 மாதம் வரை கெடாது. சாதத்தில் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். உப்புமா, தோசை, இட்லி, தயிர் சாதத்துக்கும் ஏற்றது.