Tuesday, August 27, 2013

மில்க் பிரெட் அல்வா

 தேவையானவை: 
பால் - 2 கப், 
ஸ்வீட் பிரெட் - 5 துண்டங்கள்,
 பொடியாக நறுக்கிய முந்திரி,
 பாதாம் - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், 
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
 பால்கோவா - 2 டேபிள் ஸ்பூன், 
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்,
 (விருப்பப்பட்டால்) ஏதாவது மில்க் பிஸ்கெட் - 5 அல்லது 6, 
சர்க்கரை - கால் கப்.
 செய்முறை: 
பிரெட் துண்டத்தின் ஓரங்களை எடுத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்குங்கள். பிஸ்கெட் நீங்கலாக, மற்ற எல்லாப் பொருள்களையும் அடி கனமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். சற்று சேர்ந்து வரும்வரை கிளறி இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, பிஸ்கெட்டைப் பொடித்து, அதன்மேல் பரவலாகத் தூவுங்கள் (இது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்). ஆறிய பிறகு, இதை ஃப்ரிஜ்ஜில் நன்கு குளிரவைத்து பரிமாறுங்கள்.

ஓட்ஸ் கீர்

தேவையானவை: 
ஓட்ஸ் - ஒரு கப், 
பால் - 2 கப்,
 சர்க்கரை - ஓன்றரை கப், 
பாதாம், முந்திரிப்பருப்பு - தலா 10, 
வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், 
ஏதேனும் ஒரு எசென்ஸ் - ஒரு சொட்டு, 
கிஸ்மிஸ் பழம் 10.
 செய்முறை: 
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு தலா 5 எடுத்து தோல் உரித்து பாலில் ஊற வைக்கவும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் மையாக அரைக்கவும். மீதம் உள்ள பாதாம், முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகளாக வெட்டி, நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பாலுடன் ஓட்ஸைக் கலந்து நன்கு குழைய வேக வைக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரையைக் கொட்டி கிளறவும். ஓரளவு கெட்டியான பதத்தில் வந்ததும் இறக்கி வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் பழம், எசென்ஸ் கலந்து ஃபிரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும். 

மில்க் அல்வா

தேவையானவை:
 பால் - 4 கப்,
 சர்க்கரை - 2 கப், 
நெய் - 1 கப்,
 ரவை - அரை கப்,
சீவிய பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை. 
செய்முறை: 
சிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி,
 சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, மேலே சொல்லியிருக்கும் மற்ற பொருள்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து, அடி கனமான பாத்திரம் ஒன்றில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். இந்தக் கலவை சற்று சேர்ந்து வரும்போது, நெய் பிரியும். அப்போது தீயைக் குறைத்து, கலவை நன்கு சுருண்டு வரும்வரை விடாமல் கிளறி... கடைசியில், வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதைத் தட்டில் பரப்பி, வில்லை களாகவும் போடலாம். ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம். குறிப்பு: ஒரு கப் அளவு என்பது 200மிலி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும்.

ஓட்ஸ் இனிப்பு உண்டை

 தேவையானவை: 
ஓட்ஸ் - ஒரு கப்,
 வெல்லம் - அரை கப், 
பயத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், 
தேங்காய் - ஒரு பெரிய துண்டு,
எள் - ஒரு டேபிள்ஸ்பூன், 
சுக்கு - ஒரு சிறிய துண்டு. 
செய்முறை: 
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கி சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வாசம் வரும்வரை வறுக்கவும். சுக்கைத் தூளாக்கிக் கொள்ளவும். எள்ளை வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி விட்டு இளம்பாகு வைக்கவும். இதில் ஒட்ஸ் மாவைப் போட்டுக் கிளறவும். பிறகு இதனுடன் தேங்காய், எள், பயத்தம் பருப்பு, சுக்குத்தூள் போன்றவற்றைப் போட்டு கிளறி, இறக்கி, பொறுக்கக்கூடிய சூட்டில் உள்ளங்கையில் வைத்து சிறிது சிறிதாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஆவியில் வேக வைத்து எடுக்கவும். 

ராகி கார கொழுக்கட்டை

தேவையானவை: 
ராகி மாவு - ஒரு கப், 
கடுகு - ஒரு டீஸ்பூன், 
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், 
துருவிய கேரட் - கால் கப்,
 நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், 
நறுக்கிய பச்சைமிளகாய் - 2, 
கறிவேப்பிலை - சிறிதளவு,
 உப்பு - தேவையான அளவு, 
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
 செய்முறை: 
ராகி மாவை இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் உப்பு போட்டு, வறுத்த மாவில் சேர்த்து வைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மாவை கிளறவும். கொழுக்கட்டைகளாக பிடித்து துணி போட்ட இட்லி தட்டில் வேக வைக்கவும். ராகி மாவை வாசனை வரும்வரை வறுக்கத் தேவையில்லை. லேசாக வறுத்தாலே போதும். இப்படி வறுப்பது மாவின் கொழ கொழப்புத்தன்மையை போக்குவதற்குத்தான்!. 

ஓட்ஸ் மிக்ஸர்

தேவையானவை:
 ஓட்ஸ் - ஒரு கப்,
 கார்ன் ஃப்ளேக்ஸ், அவல், வேர்க்கடலை - தலா கால் கப், 
முந்திரிப்பருப்பு - 10,
 வெள்ளரி விதை - ஒரு டேபிள்ஸ்பூன்,
 பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
 கறிவேப்பிலை - சிறிது, 
பூண்டு - 3 பல்,
 மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு -தேவையான அளவு,
  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. 
செய்முறை:
 ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், அவல் மூன்றையும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, அவல் கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெள்ளரி விதை, பொட்டுக்கடலை எல்லாவற்றையும் கலந்து குலுக்கி, பாட்டிலில் போட்டு வைக்கவும்.

ராகி லட்டு

தேவையானவை: 
வறுத்த ராகி மாவு - ஒரு கப்,
 சர்க்கரைத்தூள் - ஒண்ணேகால் கப்,
 நெய் - கால் கப்புக்கும் சிறிது குறைவாக, 
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
 ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி - தேவையான அளவு.
 செய்முறை: 
வறுத்த ராகி மாவு, சர்க்கரைத்தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். முந்திரிக்கு பதிலாக வறுத்து உடைத்த வேர்க்கடலையையும் சேர்க்கலாம். 

ஓட்ஸ் சாண்ட்விச்

தேவையானவை:
 ஓட்ஸ் - அரை கப்,
 புதினா, கொத்தமல்லி - ஒரு கட்டு,
 பச்சைமிளகாய் - 2,
 தக்காளி - 2,
 வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
 பெரிய வெங்காயம் - 3, 
வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப், 
கேரட் - 1 (பொடியாக துருவவும்), 
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
 உப்பு - தேவையான அளவு.
 செய்முறை:
 ஓட்ஸை பத்து நிமிடம் கொதிநீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். கேரட் வெந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும். கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும். டோஸ்டு செய்த ப்ரெட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.

ஓட்ஸ் கார உண்டை

 தேவையானவை:
 ஓட்ஸ் - ஒரு கப்,
 காய்ந்த மிளகாய் - 4, 
தேங்காய் - ஒரு துண்டு,
 கறிவேப்பிலை - சிறிது, 
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
 சீரகம் - அரை டீஸ்பூன், 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
 செய்முறை: 
ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி, தனியே சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஓட்ஸில் உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் போட்டு, குறைவாகத் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தவும். இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

ராகி அதிரசம்

 தேவையானவை:
 ராகி மாவு - இரண்டரை கப்,
 உருண்டை வெல்லம் - 2 கப்,
 நெய் - கால் கப்,
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
 எண்ணெய் - தேவையான அளவு.
 செய்முறை:
 உருண்டை வெல்லத்தை மெழுகு பதத்தில் பாகு காய்ச்சி ராகி மாவில் ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மாவு இளஞ்சூடாக இருக்கும் போது 2 கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு ஆறியதும் அதிரசங்களாக தட்டி எண்ணெயில் பொரித்-தெடுக்கவும்.

Friday, August 23, 2013

பஞ்சாபி சன்னா மசாலா

  தேவையானவை:
 வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்,
 பெரிய வெங்காயம் - 2,
 உப்பு - ருசிக்கேற்ப,
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
 மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
 பூண்டு - 10 அல்லது 12 பல்,
 நெய் - 6 டீஸ்பூன்,
 தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
 மல்லித்தழை - சிறிதளவு,
 சீரகம் - அரை டீஸ்பூன்.
 செய்முறை:
 வெள்ளை கடலையை முதல்நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் மஞ்சள்தூள், உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்தூள், பூண்டு சேர்த்து 4 விசில் வரை வேகவிடவும். 4-வது விசிலில், அடுப்பை ‘ஸிம்’மில் சிறிது நேரம் வைக்கவும். வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி, 2 பல் பூண்டு அரைத்த வெங்காய விழுதுடன் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்பொழுது சீரகம் சேர்க்கவும். பிறகு மசித்த தக்காளி சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். மொத்த மசாலாவையும் குக்கரில் சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டு, சிறிது நேரம் கொதிக்கவிடவும். கரம் மசாலாவையும், மல்லித்தழையையும் சேர்க்கவும். சின்னக் குழந்தை கூட இன்னொரு சப்பாத்தி கேட்கும், சன்னா மசாலா துணை இருந்தால்.

ஆலு தால்

தேவையானவை:
 உருளைக்கிழங்கு - கால் கிலோ,
பாசிப்பருப்பு - அரை கப்,
 தக்காளி - 2,
 பச்சை மிளகாய் - 50 கிராம்,
 மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
 சீரகம் - அரை டீஸ்பூன்,
 கரம் மசாலாதூள் - 2 டீஸ்பூன்,
 உப்பு - ருசிக்கேற்ப,
தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன்.
 செய்முறை: 
தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை 5 நிமிடம் வறுக்கவும். தனியாதூள், மசாலாதூள், மிளகு, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும். வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 2, 3 நிமிடம் கிளறவும். கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

தால் ஃப்ரை

 தேவையானவை:
 துவரம்பருப்பு - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
 பச்சை மிளகாய் - 1,
 தக்காளி - 1,
 கடுகு, வெந்தயம், சீரகம், தனியா - நான்கும் தலா ஒரு டீஸ்பூன்,
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
 மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
 ஆம்சூர் பொடி அல்லது எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன்,
 துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
 மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
 உப்பு - ருசிக்கேற்ப.
 செய்முறை:
 வெங்காயத்தை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளி, மல்லித்தழை, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பருப்பை வேகவிட்டு, கரண்டியின் பின்புறத்தால் நன்றாக மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வெந்தயம், சீரகம், தனியா இவற்றைப் போட்டு வறுக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, துருவின இஞ்சி போட்டு, 5-லிருந்து 7 நிமிடம் வதக்கவும். ஆம்சூர் பொடி அல்லது எலுமிச்சம்பழ சாறு, மிளகாய்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறவும். வெந்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். புலவு, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

மாங்கா பருப்பு

தேவையானவை:
 துவரம்பருப்பு - ஒரு கப்,
 மாங்காய் (காய்வெட்டாக) - 1,
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
 உப்பு - ஒன்றரை டீஸ்பூன்,
 பெரிய வெங்காயம் - 1,
 பூண்டு - 3 பல்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
 காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2,
 கறிவேப்பிலை - சிறிதளவு,
 எண்ணெய் - 2 டீஸ்பூன்.
 செய்முறை:
 வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும். பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். மிதமான தீயில் வைத்து, அரைவேக்காடாக பருப்பை வேகவைக்கவும். மாங்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, பருப்புடன் சேர்த்து நன்றாக கூழாக ஆகும் வரை வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், காய்ந்த மிளகாய் துண்டுகள், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். கறிவேப்பிலை கிள்ளி போட்டு, மாங்காய் பருப்பில் சேர்க்கவும். புளிப்பும் காரமும் சேர்ந்து சூப்பராக இருக்கும் இந்த தால்.

கோசம்பரி (ஆந்திரா)

 தேவையானவை:
 வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்,
 பச்சை மிளகாய் - 3 அல்லது 4,
 இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்,
 தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
 உப்பு - ருசிக்கேற்ப,
 எலுமிச்சம்பழச் சாறு அல்லது ஆம்சூர் தூள் - 3 டீஸ்பூன்,
 எண்ணெய் - தேவையான அளவு,
 மல்லித்தழை - சிறிதளவு.
 செய்முறை:
 தேங்காய் துருவலை மிக்ஸியில் (தண்ணீர் சேர்க்காமல்) தூளாக்கவும். கடலையை முந்தின நாள் இரவே ஊறவைக்கவும். ஊற வைத்த கடலையை எடுத்து பச்சை மிளகாயை இஞ்சியுடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பிறகு உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் தூள் சேர்க்கவும். கடுகு தாளித்து, அரைத்த கலவையை இதில் கொட்டி, 5 நிமிடம் கொதிக்க விடவும். காரம் அதிகமாக தேவையானால் காய்ந்த மிளகாய் 2 சேர்க்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.

கலவைப் பயறு தால்

  தேவையானவை:
 முழு உளுத்தம்பருப்பு, கருப்பு கொண்டைக்கடலை, காராமணி - தலா ஒரு கப், தனியாதூள் - 2 அல்லது 3 டீஸ்பூன்,
 கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன்,
 கிராம்பு - 5,
 பிரிஞ்சி இலை - 2 (சிறியது),
 பட்டை - சிறியதாக 4 துண்டுகள்,
 எண்ணெய் - தேவையான அளவு,
 உப்பு - ருசிக்கேற்ப,
 பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்,
 பெரிய வெங்காயம் - பாதி,
 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
 பச்சை மிளகாய் - 3,
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.
 செய்முறை:
 தானியங்களை முதல்நாள் இரவு ஊறவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். குக்கரில் எல்லா தானியங்களையும் வேகவிடவும். ரொம்பவும் குழைந்துவிட வேண்டாம். வெந்த பிறகு இதில் பிரிஞ்சி இலை, கரம் மசாலாதூள், மஞ்சள்தூள், தனியாதூள், பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெந்த பருப்புகளை இதில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும்.

பெல்லாரி தால் (ஆந்திரா)

 தேவையானவை:
 பெரிய வெங்காயம் - 1,
 துவரம்பருப்பு - அரை கப்,
புளித்தண்ணீர் - 4 டீஸ்பூன்,
 உப்பு - ருசிக்கேற்ப,
கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு.
 அரைக்க:
 துவரம்பருப்பு - அரை கப்,
 தேங்காய் துருவல்- - ஒரு சிறிய கப்,
 பச்சை மிளகாய் - 3 அல்லது 4,
 தனியா - கால் கப்,
 பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு கப்,
 சீரகம் - 3 டீஸ்பூன்,
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.
 செய்முறை:
 அரைக்கக் கொடுத்துள்ள சாமான்கள் அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துவைக்கவும். துவரம்பருப்பை வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் கறிவேப்பிலையும், மஞ்சள்தூளும் சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், அரைத்த விழுதையும் வெந்த பருப்பையும் சேர்த்து சிறிதுநேரம் கொதிக்க விடவும். வித்தியாசமான சுவையுடன் பெல்லாரி பருப்பு மசியல் ரெடி.

ஈஸி தால்

தேவையானவை:
 துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்,
 பூண்டு - 2 பல்,
 சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
 உப்பு - ருசிக்கேற்ப,
 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 1
 நெய் - 2 டீஸ்பூன்,
 பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு,
 எலுமிச்சம்பழச் சாறு - சிறிதளவு.
 செய்முறை:
 எல்லா பருப்புகளையும் வேகவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். கடாயில் நெய் ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பாதியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அரைத்த பருப்பை சேர்த்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்க்கலாம். அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

‘ஆல் இன் ஒன்’ தால்

  தேவையானவை:
 துவரம்பருப்பு - அரை கப்,
 பாசிப்பருப்பு - அரை கப்,
 பெரிய வெங்காயம் - 1,
 தக்காளி - 1,
 பச்சை மிளகாய் - 2,
 இஞ்சி - சிறிதளவு,
 பூண்டு - 3,
 பட்டாணி - கால் கப்,
 கேரட் - பாதி,
 கீரை (ஏதாவது ஒரு கீரை) - ஒரு கப்,
 உப்பு - ருசிக்கேற்ப,
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
 தாளிக்க: 
எண்ணெய் - தேவையான அளவு,
 கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
 செய்முறை:
 வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு, கேரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும். பட்டாணியையும் கேரட்டையும் தனியாக மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். கீரையுடன் 2 பருப்புகளையும் சேர்த்து வேகவிடவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவைத்த கீரை, பருப்புகள், கேரட், பட்டாணி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

நெய் பருப்பு மசியல்

 தேவையானவை:
 துவரம்பருப்பு - ஒரு கப்,
 பாசிப்பருப்பு - கால் கப்,
 தக்காளி - 2,
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
 உப்பு - ருசிக்கேற்ப,
 மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
 சாம்பார்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
 சீரகம் - ஒரு டீஸ்பூன்,
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.
 செய்முறை:
 தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 2 பருப்புகளையும் குக்கரில் குழைய வேகவிடவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் தக்காளி துண்டுகள், மிளகாய்தூள், பெருங்காயம், சாம்பார்தூள் போட்டு நன்றாகக் கிளறவும். 2 நிமிடத்துக்குப் பிறகு உப்பு போடவும். கடைசியில் வெந்த பருப்பைப் போட்டு கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். இந்த ‘தாலை’ விரைவாகவும் சுலபமாகவும் செய்யலாம்.

கீரை பருப்பு தயிர் தால்

 தேவையானவை:
 பாலக் கீரை - ஒரு கட்டு,
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்,
 கடலைமாவு - 3 டீஸ்பூன்,
 வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு டீஸ்பூன்,
 வேர்க்கடலை - 2 டீஸ்பூன்,
 உப்பு, சர்க்கரை - சிறிதளவு.
 தாளிக்க:
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
 பெருங்காயத்தூள் - சிறிதளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
 சீரகம் - ஒரு டீஸ்பூன்,
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
 கறிவேப்பிலை - சிறிது.
 செய்முறை:
 கீரையைக் கழுவி, ஆய்ந்து நறுக்கி வைக்கவும். அரைமணி நேரம் வெள்ளை கடலையையும், வேர்கடலையையும் வெந்நீரில் ஊற வைத்து, குக்கரில் வேகவிடவும். பிறகு கீரையையும் கடலைகளுடன் சேர்த்து வேக விடவும். தயிரில் கடலைமாவை பேஸ்ட் மாதிரி கரைத்து கொள்ளவும். கீரை, கடலை கலவையை வேகவைத்த தண்ணீருடன் நன்றாக மசித்து கொள்ளவும். தயிரில் கரைத்த கடலைமாவை இதில் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, கீரைக் கலவையில் கொட்டவும். கடைசியில் சிறிது சர்க்கரையும், தேவையான உப்பையும் போட்டு, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

கோதுமை மாவு குழியப்பம்




தேவையானவை: 
கோதுமை மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப்,  பொடித்த வெல்லம் - அரை கப், நன்கு பழுத்த பூவன் பழம் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:
 ஒரு பேஸினில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பழத் துண்டுகளைப் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெல்லத்தில் ஒரு கப் நீர் ஊற்றி, நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கோதுமை மாவு கலவையுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும். குழிப் பணியாரக் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காயவிடவும். பின்பு அடுப்பை தணித்து, சிறு குழிக்கரண்டியால் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். அப்பங்கள் சிவந்ததும் அப்பக் குத்தியால் இதை திருப்பிப் போடவும். அப்பங்கள் நன்கு சிவந்து பொன்னிறமானதும் கரண்டியால் எண்ணெயை வடிகட்டி, வடிதட்டில் போடவும். இதைப் போல் முழு மாவையும் அப்பங்களாக செய்து ஒரு பேஸினில் போடவும். மேலாக நெய், பொடித்த சர்க்கரை போட்டு நன்றாக குலுக்கி பரிமாறவும்.

பாலக்-குடமிளகாய் தால்

தேவையானவை:
 பருப்பு - 2 கப் (எந்த பருப்பு வேண்டுமானாலும்),
பொடியாக நறுக்கிய பாலக் கீரை - ஒரு கப்,
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப்,
 பச்சை மிளகாய் - 3,
 கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன்,
 கடுகு, சீரகம் - தாளிப்பதற்கு தேவையான அளவு,
 மாங்காய் துண்டு (பெரியது) - 1,
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
 செய்முறை:
 பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பருப்புகளையும், மாங்காயையும் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். (குழைய வேண்டாம்). கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் வெடித்ததும், குடமிளகாய் போட்டு வதக்கி, 2 நிமிடம் கழித்து கரம் மசாலாதூள் போட்டு கிளறவும். வெந்த பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும். சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சாப்பிடவும். குறிப்பு: பாலக் கீரைக்கு பதிலாக வெந்தயக்கீரை, முள்ளங்கி கீரை சேர்க்கலாம். பருப்புகளுக்கு பதிலாக முளைகட்டிய பயறும் சேர்க்கலாம். கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்தும் இந்த தால் செய்யலாம்.

மிக்ஸ்டு வெஜிடபிள் தால்

 தேவையானவை:
 பாசிப்பருப்பு - ஒன்றரை கப்,
இஞ்சி - 50 கிராம்,
 மல்லித்தழை - சிறிதளவு,
 பொடியாக நறுக்கிய காய்கறிகள் (காலிஃப்ளவர், கேரட், சிகப்பு முள்ளங்கி, பூசணி, பட்டாணி எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,
எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்,
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
 சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
 பச்சை மிளகாய் - 3,
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.
 செய்முறை:
 பச்சை மிளகாய், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். (எவ்வளவு தளர்த்தியாக பருப்பு வேண்டுமோ, அந்த அளவு நீரை கொதிக்க விடவும்). பெரிய பிரஷர் பான் அல்லது கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு வெடித்ததும், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கழித்து நறுக்கிய காய்கறிகள் + பெருங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். அதோடு வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்கும் நீரை விட்டு, மூடியால் மூடி 40 நிமிடம் வேக விடவும். நடு நடுவே கிளறிவிடவும். (தீயைக் குறைவாக வைக்கவும்). இப்பொழுது பருப்பும் காய்கறியும் சேர்ந்து வெந்திருக்கும். எலுமிச்சம்பழச் சாறை சேர்க்கவும். பாஸ்மதி அரிசி சாதத்துடன் சாப்பிட, சத்தான பருப்பு மசியல் ரெடி.

முளைப்பயறு தால்

 தேவையானவை:
 வெங்காயம் - 1,
பாசிப்பயறு (முளை கட்டியது) - அரை கப்,
 தனியாதூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய்தூள் - கால் டீஸ்பூன்,
 இஞ்சி - ஒரு துண்டு,
 பூண்டு (தேவையானால்) - 2 பல்,
 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
 மல்லித்தழை - சிறிதளவு.
 செய்முறை:
 பயறை வேகவிடவும். முக்கால் பாகம் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மீதியை மிக்ஸியில் தனியாதூள், உப்பு, இஞ்சி சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும். வெந்த பருப்பையும் சேர்க்கவும். சிறிது நேரம் நன்றாக கிளறவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தியுடன் சாப்பிட அருமையான சைட் டிஷ் இது.

கோகனட் தால்

தேவையானவை:
 பாசிப்பருப்பு - அரை கப்,
 தேங்காய் துருவல் - ஒரு கப்,
 மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
 பூண்டு - 6 பல்,
 கறிவேப்பிலை - சிறிதளவு,
 எண்ணெய், கடுகு - தேவையான அளவு,
 காய்ந்த மிளகாய் - 2,
 உப்பு - ருசிக்கேற்ப.
 செய்முறை:
 பருப்பை வாசனை வரும்வரை எண்ணெய் இல்லாமல், வெறும் வாணலியில் வறுக்கவும். பிறகு வேகவிடவும். மிக்ஸியில் தேங்காய், பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து அரைக்கவும். வெந்த பருப்புடன் உப்பு, அரைத்த கலவை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை போட்டு, பருப்பு கலவையை சேர்க்கவும். கொதிக்கவிட வேண்டாம். சூடானால் போதுமானது. சாதம், பப்படத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

ஆப்பிள் தால்

தேவையானவை:
 புளிப்பு ஆப்பிள் - 2,
 சாம்பார்தூள் - 4 டீஸ்பூன்,
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
 பெரிய வெங்காயம் - 1,
 பச்சை மிளகாய் - 1,
 பழுத்த தக்காளி - 1,
 கடுகு, சீரகம் - தாளிக்க தேவையான அளவு,
 உப்பு - ருசிக்கேற்ப,
 எண்ணெய் - 2 டீஸ்பூன்,
 வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப்,
எலுமிச்சம்பழச் சாறு - சிறிதளவு,
 மல்லித்தழை - சிறிதளவு.
 செய்முறை:
 வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். தக்காளியை விழுதாக அரைக்கவும். ஆப்பிளை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி எலுமிச்சம்பழச் சாறில் அரைமணி நேரம் ஊறவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து, தக்காளி விழுது, சாம்பார்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். ஆப்பிள் துண்டுகளை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும். உப்பு, மல்லித்தழை தூவி, அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் கிளறவும். அருமையான ஆப்பிள் மசியல் ரெடி. தக்காளிக்கு பதிலாக புளிக்கரைசலும் சேர்க்கலாம்.

கோதுமை பழக்கஞ்சி




தேவையானவை: 
 கோதுமை மாவு - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், பனங்கற்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பூரா சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம், ஆப்பிள் - தலா ஒரு துண்டு, கமலா ஆரஞ்சு சுளைகள் - 4.
செய்முறை: 
 கால் டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். பழங்களை விதை நீக்கி மிக்ஸியில் மசிக்கவும். மீதமுள்ள பாலை நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும். இத்துடன் கரைத்த மாவு, பழக் கூழ், பனங்கற்கண்டு, பூரா சர்க்கரை சேர்த்துக் கலக்கி பருகக் கொடுக்கவும்.

கோழி பொடிமாஸ்

தேவையானப் பொருட்கள்:
 அரை கிலோ பொடியாக கோழித் துண்டுகள்
 பதினைந்து சின்ன வெங்காயம்
 ஐந்து பச்சை மிளகாய்
 அரை கப் எண்ணெ‌ய்
 இரண்டு கொத்து கறிவேப்பிலை
 ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு
 ஒரு டேபிள் ஸ்பூன்
உளுந்து அரை டீஸ்பூன்
 சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன்
 கடலைப் பருப்பு நாலு டேபிள் ஸ்பூன்
 தேங்காய் துருவல்
தேவையான அளவுஉப்பு

  செய்முறை:
 கோழித்துண்டுகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த கோழித்துண்டுகளை உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எ‌ண்ணெ‌ய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், கடலைப் பருப்பு தாளிக்கவும். எல்லாம் நன்கு சிவந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு கோழித் துண்டுகளைப் போட்டு, ஐந்து நிமிடம் வதக்கவும். கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். 

கீரை இட்லி

  தேவையானவை
 இட்லி மாவு - 2 கப்
 இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
 பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
  செய்முறை:
 மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊன்றி வேக வைத்து எடுங்கள். கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம். இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.
 இட்லி மாவுஅளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

கோதுமை குருணை புளி உப்புமா




தேவையானவை: 
 
 கோதுமை குருணை - ஒரு கப்,
 புளிச்சாறு -அரை டேபிள்ஸ்பூன்,
 பச்சை மிளகாய் (சிறியது) - ஒன்று,
  காய்ந்த மிளகாய் (சிறியது) - ஒன்று, 
 இஞ்சி  - சிறிய துண்டு,
 தேங்காய் துருவல் - கால் கப்,
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
 கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
 கடுகு - அரை டீஸ்பூன்,
 உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
 கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,
 ரீஃபைண்ட் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்,
 உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
  கோதுமை குருணையை சிறிதளவு எண்ணெயில் வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய வைத்து, கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். இத்துடன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வறுக்கவும். இதனுடன் கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் 3 கப் நீர், புளிச்சாறு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அடுப்பை ’சிம்’மில் வைத்து, கோதுமை குருணையை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள எண்ணெயையும் ஊற்றி உப்புமா சிறிது தளற ஆனதும், தேங்காய்த் துருவல் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து, 10 நிமிடத்துக்குப் பின்னர் பரிமாறவும். இதற்கு, தக்காளி சட்னி உகந்தது.

மீன் குழம்பு

 தேவையான பொருட்கள்
 மீன் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
 நாட்டுத் தக்காளி - 200 கிராம்
 புளி - எலுமிச்சம் பழ அளவு
 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
 உப்பு,- தேவைக்கேற்ப
எண்ணை - தேவைக்கேற்ப
 அரைக்க
 மிளகு - 2 டீஸ்பூன்
 சீரகம் - 1 டீஸ்பூன்
 தேங்காய் துருவல் - 1/2 மூடி
 இஞ்சி - சிறு துண்டு
  தாளிக்க
 கடுகு,
காய்ந்த மிளகாய்,
 கறிவேப்பிலை
 செய்முறை
 * மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மீனைப்போட்டு வறுத்தெடுக்கவும்.
 * அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை விழுதாக்கி கொள்ளவும்.
 * புளியைக் கரைத்துக் கொண்டு அந்த நீரிலேயே மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் தேவைக்கேற்ப உப்பு, அரைத்த மசாலா அனைத்தையும் சேர்க்கவும்
. * எண்ணெயைக் காய வைத்து கடுகு, காய்ந்த மிளகாயை தாளிக்கவும், வெங்காயம், தக்காளியை வதக்கி கரைத்து வைத்த புளிநீரைக் கொதிக்க வைக்கவும். கொதி வெந்தவுடன் மீனைப் போட்டு கிளறி இறக்கி விடவும். குறிப்பு
 * இந்த மீன் குழம்பு ருசியாக இருக்கும். இதற்கு வெல்லம் தேவையில்லை.

லெட்டூஸ் கீரை ரோல் குழம்பு

 தேவையானவை
 உருளைக் கிழங்கு - 200 கிராம்
 சின்ன வெங்காயம் - 50 கிராம்
 கடலை மாவு - 1/2 கப்
 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 கறி மசாலா - 1/4 டீஸ்பூன்
 லெட்டூஸ் இலை - 15
குழம்பிற்கு - தேவையானவை
 புளி - சிறு உருண்டை
 தேங்காய் துருவல் - 1/2 கப்
 சோம்பு - 1/2 ஸ்பூன்
 சின்ன வெங்காயம் - 10
 தக்காளி - 1 டீஸ்பூன்
 மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
 மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
 பட்டை கிராம்பு - சிறிதளவு
 உப்பு எண்ணெய் - தேவையான அளவு
 செய்முறை
 * உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு கட்டி இல்லாமல் மசிக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கடலை மாவு, மிளகாய்த்தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.
 * லெட்டூஸ் கீரையை நடுவில் உள்ள காம்பை நீக்கி 2 துண்டுகளாக்கவும் இந்த பாதி லெட்டூஸ் இலை மேல் மாவுக்கலவையை வைத்து ரோலாக சுருட்டி வைக்கவும்.
 * இப்படி மாவு அனைத்தையும் லெட்டூசில் ரோல் செய்து இட்லி தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல அவித்து எடுக்கவும்.
 * புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தேங்காய், வெங்காயம், சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
 * தக்காளி சேர்த்து வதக்கவும், அரைத்த தேங்காய் மசாலாவை இத்துடன் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு பொடி வாசனை போக கொதிக்க விடவும்.
 * குழம்பு நன்றாக கொதித்ததும் வேக வைத்த லெட்டூஸ் கீரை ரோலைப் போட்டு மூடி வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

மட்டன் கீமா புலாவ்

 தேவையான பொருட்கள்
 பாசுமதி அரிசி - 2 கப்
 கொத்துக்கறி - 300 கிராம்
 தயிர் - 2 கப்
 வெங்காயம் - 1 இஞ்சி,
 பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
 லவங்கம் - 6
 ஏலக்காய் - 8
 மிளகு - 1/2 டீஸ்பூன்
 பாதாம் - 1/4 கப்
 பிஸ்தா - 1/4 கப்
காய்ந்த திராட்சை - 1/2 கப்
 குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
 நெய் - 5 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப
 செய்முறை
 * ஒரு பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 * இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பாதாம் பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கீமாவைச் சேர்த்து வதக்கவும்.
 * இப்போது போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கறியை வேகவிடவும்.
 * பிரஷர் போனதும் திறந்து பாசுமதி அரிசியைச் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.
 * மட்டனும், அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவைப் பரிமாறவும்.

இட்லி மஞ்சூரியன்

தேவையானவை
 இட்லி - 6
 இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
 பெரிய வெங்காயம் - 2
 தக்காளி - 2
 வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
 சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
 அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
 மிளகாய்த்தூள் - 1/2 சிட்டிகை
கறி மசாலா - 1/2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் + நெய் - தேவையான அளவு

 செய்முறை
 இட்லியை துண்டுகளாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவிட்டு அதில் பொரித்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி வதக்கவும். வதங்கியதும் மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ, மிளகாய்த்தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். நன்கு வதங்கியதும் பொரித்து வைத்த இட்லி துண்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி, பச்சைக் கொத்துமல்லி தூவி கிளறி இறக்கி வைக்கவும். சூடான இட்லி மஞ்சூரியன் ரெடி. குறிப்பு அஜினோமோட்டோ குழந்தைகளுக்கு அதிகம் ஒத்துக்கொள்ளாது. மிகக் குறைந்த அளவே பயன்படுத்தவும்.

ரிப்பன் முறுக்கு

 தேவையானவை
 புழுங்கலரிசி - 3 டம்ளர்.

 பொட்டுக்கடலை - 1 டம்ளர்.
 தேங்காய் - 1 மூடி
 பச்சை மிளகாய் - 6
 பெருங்காயம் - சிறு துண்டு
 எள் - 1 டீஸ்பூன்
 உப்பு - 3 டீஸ்பூன்
 டால்டா - 4 டீஸ்பூன்
 சூரியகாந்தி எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை
 அரிசியை நன்றாக ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக கெட்டியாக வதக்கவும். பொட்டுக்கடலையை மிக்சியில் தூள் செய்து கொள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், பெருங்காயம் உப்பு இவைகளை அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசி மாவுடன் பொட்டுக் கடலைத்தூள், அரைத்த தேங்காய்க் கலவை, எள், டால்டா, எல்லாவற்றையும் போட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து முறுக்கு குழாயின் ரிப்பன் அச்சில் மாவை இட்டு எண்ணையில் ஒரு சுற்று பிழிந்து விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு முறுக்குபோல சத்தம் அடங்கியதும் எடுக்கவும். குறிப்பு வழக்கமான முறுக்கு செய்வதை விட இந்தப் பொட்டுக்கடலை முறுக்கு, வித்தியாசமான சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும். காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்திருந்து சாப்பிடலாம்.

Thursday, August 22, 2013

ரவை பாயசம் :


தேவையானவை :

ரவை 1 பிடி,
 பயற்றம் பருப்பு 1/2 கரண்டி,
வெல்லம் எலுமிச்சையளவு,
 பால் 2 கரண்டி,
ஏலக்காய் 2,
 முந்திரிப்பருப்பு 5, 
கேசரிப்பவுடர் 1 சிட்டிகை,
 நெய் 3 ஸ்பூன்

செய்முறை :வெண்கலத்தில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை வறுத்துக் கொண்டு அதில் 1/2 ஆழாக்கு தண்ணீரை ஊற்றி விடாமல் கிளறி, பயற்றம் பருப்பையும் போடவும். இரண்டும் நன்கு வெந்தவுடன் வெல்லத்தை நறுக்கி சேர்க்கவும். வெல்ல வாசனை போக கொதித்தவுடன் கேசரிப்பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

இதில் வெல்லத்திற்கு பதிலாக இரண்டு கரண்டி சர்க்கரை சேர்த்தும் தயாரிக்கலாம். பயற்றம் பருப்பு சேர்க்கத் தேவையில்லை.


கோபி–வேர்கடலை பட்டீஸ்

தேவையானவை;-

காலிஃப்ளவர்    1 கப்(சிறு சிறு பூக்களாக ஆய்ந்தது)

வறுத்த வேர்க்கடலை  1/2 கப்(ஒன்றிரண்டாக மிக்சியில் பொடிக்கவும்)

வெங்காயம்      1(பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அரைத்தவிழுது1 டீஸ்பூன்

எண்ணெய் தேவையான அளவு

உப்பு பொடியாக ந்றுக்கிய கொத்தமல்லிசிறிதளவு

பட்டீஸ் செய்ய

மைதா    1கப்

கார்ன்ஃப்ளவர்  1/2 கப்

உப்பு      1சிட்டிகை

செய்முறை;-

1.ஆய்ந்த காலிஃப்ளவருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.

2.வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் காலிஃப்ளவர் பொடித்த வேர்க்கடலை பச்சை மிளகாய் இஞ்சி

பூண்டு விழுது எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி கொத்தமல்லி தூவி தனியே வைக்கவும்.

3.மைதா கார்ன்ஃப்ளவர் உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு மாவு பிசைந்து சின்ன சின்ன வட்ட பூரிகளாக

திரட்டவும்.ஒரு வட்டத்தின் மேல் ஒரு டீஸ்பூன் காலிஃப்ளவர் கலவையை சற்று பரவலாக் வைத்து அதன்

மேல் மற்றொரு வட்டத்தை வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி சூடான எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

ராஜ்மா மசாலா

தேவையான பொருட்கள்


சிகப்பு கிட்னி பீன்ஸ்(ராஜ்மா பீன்ஸ் ) – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 3
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 /2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 /2 தேக்கரண்டி
அரைக்க

பூண்டு - 4 பல்
இஞ்சி – ஒரு துண்டு
தாளிக்க

சீரகம் – 1/2 தேக்கரண்டி
பட்டை – 1 ” துண்டு
பிரியாணி இலை – 1
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை

ராஜ்மா பயிரை 7 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த பயிரை 5 – 6 விசில்கள் வரை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை சுடு நீரில் ஊற வைத்து தோலுரித்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
கடைசியாக வேக வைத்து வைத்துள்ள ராஜ்மா, தேவையான அளவு தண்ணீர், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலாதூள் சேர்த்து 20 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வேக வைக்கவும்.
ராஜ்மா மசாலா சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

சேமியா வடை


தேவையான பொருட்கள்:வேக வைத்த சேமியா - கால் கப்
மைதா - ஒரு மேஜைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - ஒரு மேஜைக் கரண்டி
பூண்டு - 1
பச்சை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
கொத்துமல்லி இலை - சிறிதளவு.
செய்முறை:
சேமியாவை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு, வேக வையுங்கள்.
பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
கொத்தமல்லி இலையையும் பொடியாக நறுக்குங்கள்.
பிறகு பூண்டை அரைத்து, இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அத்துடன் தேங்காய்த் துருவல், உப்பு, மைதா, வேக வைத்த சேமியா ஆகியவற்றையும் சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, வடையாக சேமியா கலவையைத் தட்டி, எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பி வேக வைத்து எடுக்கவும்.

காரட் பயத்தம் பருப்பு சாலட்

தேவையானப்பொருட்கள்:

காரட் - 2
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மாங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

* பயத்தம் பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

* காரட்டைக் கழுவி, தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும்.

* கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.(விதையை நீக்கி விட்டால், காரம் குறைந்த்து விடும். மிளகாயையும் கூட சாப்பிடலாம்).

* ஒரு பாத்திரத்தில் காரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, மாங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு போட்டுக் கலக்கவும்.

* தாளிக்கும் கரண்டியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, காரட் கலவையில் கொட்டவும்.

* கடைசியாக ஊற வைத்துள்ள பருப்பை, தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, காரட்டுடன் சேர்க்கவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


பாகற்காய் வெல்ல பச்சடி

தேவையானப் பொருட்கள்:
பாகற்காய் - 2
புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
தக்காளி - 2
வெல்லம் - 1/2 கப் (பொடி செய்தது)
மிளகாய்த்தூள் ‍- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ‍- 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு ‍- 1/2 டீஸ்பூன்
சீரகம் ‍- 1 டீஸ்பூன்
வெந்தயம் ‍- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
* புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
* தக்காளியை நன்றாக கழுவிய பின் அரைத்துக் கொள்ளவும்.
* பாகற்காயை கழுவி விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் தண்ணீரை விட்டு நன்கு வேக விடவும். வெந்தவுடன், அதில் புளித்தண்ணீர், தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறி, மூடி வைத்து, கொதிக்க விடவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானவுடன், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, தாளித்து, அதில் கொதிக்கும் பாகற்காய் கலவையைக் கொட்டி கலக்கவும்.
* பின்னர் கடைசியாக வெல்லப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டு, சிறு தீயில் வைக்கவும். வெல்லம் கரைந்து, பச்சடி திக்கானவுடன், இறக்கி பரிமாறவும்.


தர்பூஸ் மசாலா ஜூஸ்

தேவையான பொருட்கள்:
தர்பூசணி பழம் - அரை அளவு
இஞ்சி - 25 கிராம்
புதினா - கைப்பிடி அளவு
எலுமிச்சம்பழம் - பாதி
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 100 கிராம்
உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை:
* முதலில் இஞ்சி, புதினாவை நன்கு கழுவி மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* தர்பூசணியின் விதை நீக்குவது கடினம் என்பதால், அப்படியே மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு வடிகட்டினால் விதையின் திப்பிகள் அடியில் தங்கி விடும். அரைத்து வைத்த இஞ்சியையும், புதினாவையும் தர்பூசணி ஜூஸோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
* அதோடு மிளகுத்தூள், பெருங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து ஒரு க்ளாஸ் குடித்துப் பாருங்கள் இதன் ஆரோக்கிய சுவை தெரியும்.


Sunday, August 18, 2013

கீரை புலாவ்

தேவையான பொருட்கள்:
அரிசி - ஒண்ணேகால் கப்
கீரை - அரை கப்
புதினா - அரை கப்
கொத்தமல்லி - கால் கப்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
பிரிஞ்சி இல்லை - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
வெங்காயம் - அரை கப்
தக்காளி - அரை
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிகரண்டிசோம்பு - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்

செய்முறை:


*
அரிசியை நன்றாக களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* வெங்காயத்தையும்,மிளகாயையும் நீளமாக நறுக்கிகொள்ளவும்.

* சோம்பையும்,கசகசாவய்யும் மிக்சியில் நன்றாக பொடித்து கொள்ளவும்.
(வறுக்க கூடாது பச்சையாக பொடிக்கவும்)

* ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,
பிரிஞ்சி இலை போட்டு பொரிக்க விடவும்.

* பின்பு பொடித்த பொடியை போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* லேசாக வதங்கியதும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

* உப்பு சேர்க்கவும்.

* பின்பு கீரை சேர்த்து ஒரு நிமிடம் தணலை குறைத்து வைத்து வதக்கவும்.

* ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்து அரிசியை மட்டும் வதக்கிய
கலவையில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

* பின்பு தக்காளி சேர்த்து மூன்று கப் நீர் சேர்த்து வேக விடவும்.

* நன்கு வெந்ததும் எடுத்து தேவையானால் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கீரை புலாவ் தயார்.