Monday, March 10, 2014

பாசிப்பருப்பு முறுக்கு


தேவையானவை: 
 பாசிப்பருப்பு மாவு - 2 கப்,
பச்சரிசி மாவு - அரை கப்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
ஓமம் - சிறிதளவு,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: 
வறுத்த பாசிப்பருப்பு மாவு, பச்சரிசி மாவு, உப்பு, ஓமம், மிளகாய்த்தூள், வெண்ணெய் சேர்த்து பிசறி, தேவையான தண்ணீர் சேர்த்து முறுக்குமாவு பதத்துக்கு பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக சுட்டு எடுக்கவும்.

பட்டாணி

தேவையான பொருட்கள்: 
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
மல்லி - 1/2 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பட்டாணி - 500 கிராம் 
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு - 3-4 பற்கள் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
மிளகு தூள் - தேவையான அளவு 
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்) 
கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க) 
செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு சேர்த்து 1-2 நிமிடம் தாளித்து, பின் அதில் மல்லி, ஏலக்காய் பொடி, மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் பட்டாணி, இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் மிளகு சேர்த்து, தீயை அதிகரித்து, 5 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும். பட்டாணியானது நன்கு வெந்துவிட்டால், இறுதியில் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், பட்டாணி ரெசிபி ரெடி.

 

பரங்கிக்காய் -பச்சைப்பயறு கூட்டு


தேவையானவை: 
 பரங்கிக்காய் - 250 கிராம்,
பச்சைப்பயறு - ஒரு கப்,
தேங்காய் - கால் மூடி,
சீரகம் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: 
 பச்சைப்பயறை நன்றாக ஊற விடவும். முளைப்பயிறாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம். தேங்காயுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பயறுடன் பரங்கிக்காயை சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
ஊட்டச்சத்து உணவான பயறு எளிதில் ஜீரணமாகிவிடும்.

கொண்டைக்கடலை பிரியாணி

தேவையான பொருட்கள்: 
சாதத்திற்கு:
 பாசுமதி அரிசி - 2 கப் (வேக வைத்தது) 
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
குங்குமப்பூ - 1 சிட்டிகை 
குறைந்த கொழுப்புள்ள பால் - 1/2 கப் 
எண்ணெய் - 1 டீஸ்பூன்
 மசாலாவிற்கு:
கொண்டைக்கடலை - 1 கப் (இரவு முழுவதும் நீரில் ஊற வைத்தது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
குறைந்த கொழுப்புள்ள தயிர் - 1 கப் 
தக்காளி - 3 (நறுக்கியது) 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 2 கப்
 செய்முறை: 
மசாலாவின் செய்முறை:
 முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொண்டைக்கடலையை கழுவிப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 4-5 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும். 
அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும். 
பின்பு உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், தயிர் சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 பிரியாணி செய்முறை:
குங்குமப்பூவை பாலில் போட்டு தனியாக ஊற வைக்க வேண்டும். பின் கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சாதத்துடன் சேர்த்து, எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேவில் பாதியை போட்டு ஒரு லேயர் தயாரித்து, அதன் மேல் பாதி மசாலாவை தூவ வேண்டும். அடுத்து அதன் மேல் மீதமுள்ள சாத்தை பரப்பி, குங்குமப்பூ பாலை ஊற்றி, இறுதியில் மீதமுள்ள மசாலாவை தூவி, அதன் மேல் அலுமினியம் கவர் சுற்றி, மைக்ரோ வேவ் ஓவனில் 200 டிகிரியில் 20 நிமிடம் வைத்து இறக்கினால், சுவையான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி.

பாசிப்பருப்பு பராத்தா


தேவையானவை:  
பாசிப்பருப்பு - 1கப்,
கோதுமை மாவு - 2 கப்,
மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் தலா - ஒரு டீஸ்பூன்,
பொடியாகநறுக்கிய பச்சைமிளகாய்,கொத்தமல்லி,இஞ்சி துருவல் - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: 
கோதுமை மாவில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தலா அரை டீஸ்பூன் சேர்த்து, உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி போட்டு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். இதில் பாசிப்பருப்பை போட்டு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றியதும் பருப்பை மசித்து சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இட்டு, அதனுள் பருப்பு உருண்டையை வைத்து மூடி, மீண்டும் பராத்தாவாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
100 கிராம் பச்சைப்பயறில் கார்போஹைட்ரேட் 56.7% , புரதம் 24%, கொழுப்பு 1.3%
எனர்ஜி 334 கிலோ கலோரி இருக்கிறது.

Wednesday, March 5, 2014

உருளைக்கிழங்கு வெங்காய தோசை

தேவையான பொருட்கள்: 
தோசை மாவு - 3 கப்
 உருளைக்கிழங்கு - 200 கிராம் (வேக வைத்து மசித்தது) 
வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது) 
கடுகு - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதனை சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், அதில் எண்ணெய் தடவி, மாவை தோசை போன்று ஊற்றி, பின் அதன் மேல் வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை பரப்பி, எண்ணெய் ஊற்றி, 3 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து, பின் அதனை மடித்து பரிமாற வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு வெங்காய தோசை ரெடி. இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

காலிஃப்ளவர் குழம்பு

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது) 
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 1 கப் 
சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
செய்முறை: 
முதலில் காலிஃப்ளவரை உப்பு நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டிவிட்டு, தனியாக காலிஃப்ளவரை வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரைப் போட்டு மிதமான தீயில் 5-6 நிமிடம் வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் மீதமுள்ள 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் பேஸ்ட், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் அரைத்த தக்காளியை ஊற்றி, 2-3 நிமிடம் கிளறி விட்டு, காலிஃப்ளவர், உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி கிளறி, 5-6 நிமிடம் குறைவான தீயில் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியில் மூடியைத் திறந்து, அதில் கரம் மசாலா சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால்,  காலிஃப்ளவர் குழம்பு ரெடி.

பச்சைப்பயறு சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6 முதல் 8, முளைகட்டிய பயறு - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்-தக்காளி - கால் கப், வெண்ணெய் - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: 

பிரெட்டில் வெண்ணெய் தடவவும். பயறுடன் தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை இரண்டு பிரெட் துண்டுகளின் நடுவில் வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும். தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கலாம்.

பருப்பு வகை உணவுகளை நன்றாக வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது.

பச்சைப்பயறு குருமா

தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கபதக்காளி, வெங்காயம் - தலா 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறை 6 மணி நேரம் ஊற வைக்கவும். முளை கட்டிய பயறு எனில் ஊற வைக்க வேண்டாம். தக்காளி, வெங்காயம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் தனியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தக்காளி-வெங்காய மசாலா விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். சிறிது வதங்கியதும் பயறைச் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும் அரைத்த தேங்காய், உப்பு சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கொதித்து வரும்போது கொத்தமல்லி தூவி, இறக்கி பரிமாறவும்.
 மிக அதிக புரதச்சத்து நிறைந்தவை பயறு வகைகள். கலோரி, கார்போஹைட்ரேட், புரதம் மூன்றும் சரிவிகிதத்தில் இருக்கும். சமச்சீரான புரதம் கிடைத்துவிடும்.

பாசிப்பருப்பு துவையல்

தேவையானவை: 
பாசிப்பருப்பு - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
புளி - கொட்டைப்பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்.
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
 செய்முறை: 
பாசிப்பருப்பு ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பருப்புத் துவையலில் சேர்த்துப் பரிமாறவும்.

பாசிப்பருப்பு தோசை


தேவையானவை:
பாசிப்பருப்பு - ஒரு கப்,
பச்சரிசி - கால் கப்,
பச்சை மிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பு, பச்சரிசியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற விடவும். ஊறிய அரிசியை முதலில் லேசாக அரைத்து, பிறகு பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை போட்டு, காய்ந்ததும் மாவை ஊற்றி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

Tuesday, March 4, 2014

கீரை மசியல்

தேவையானப் பொருள்கள்:
கீரை- 1கட்டு
சின்ன வெங்காயம்-3
தக்காளி-1/2
பச்சை மிளகாய்-1
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
உளுந்து
மிளகு-5
சீரகம்-1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-2
பூண்டு-5 பற்கள்
பெருங்காயம்-சிறிது
நல்லெண்ணெய்-2 டீஸ்பூன்
செய்முறை:
கீரையைக் கழுவி நீரை வடிய வைத்து நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு கீரை சேர்த்து வதக்கவும.மூட வேண்டாம். சிறிது நேரத்திலேயே வதங்கிவிடும்.இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
மீண்டும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மிக்ஸியில் உள்ள கீரையில் கொட்டி சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.தேவையான உப்பு சேர்த்து ஒரு கிண்ண‌த்தில் எடுத்து வைக்கவும்.தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.இது சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்.
கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கீரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும்.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும்.இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்.

மணத்தக்காளி இலை பொரித்த குழம்பு

தேவையான பொருள்கள்:
நன்கு ஆய்ந்து நறுக்கிய மணத்தக்காளி இலை - 1 கப்
துவரம்பருப்பு  - 50 கிராம்
கடுகு        - 1 டீஸ் பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய்  -  4 டீஸ்பூன்
மிளகு      - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறுதுண்டு
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்     -  1 சிட்டிகை
உப்பு       - தேவைக்கேற்ப
செய்முறை:
துவரம் பருப்பையும், மணத்தக்காளி கீரையையும் நன்றாகக்கழுவி  குக்கரில் அளவாக தண்ணீர் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து  மூன்று விசில் சத்தம் வரும் வரை வைத்து வேகவைக்கவும்.  இரண்டு ஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு சூடு படுத்தி அதில் மிளகு, ஒரு டீஸ் பூன் உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து, கடைசியில் துருவிய தேங்காயையும் போட்டு ஒருமுறை பிரட்டி எடுக்கவேண்டும். வறுத்த சாமான்களை மிக்சியில் நன்றாக அரைத்து வேக வைத்துள்ள பருப்பு கீரை கலவையில் கொட்டி கொதிக்க விடவேண்டும். தேவைக்கேற்ப உப்பு போடவேண்டும், எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்பொழுது 1 டீஸ்பூன் அரிசிமாவை 4 ஸ்பூன் தணிணீர்விட்டு கரைத்து கொதிக்கும் குழம்பில் விடவேண்டும். எல்லாம் ஒன்று சேர்ந்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து கடுகு உளுத்தம் பருப்பை தாளித்துக்  கொட்டவேண்டும். சூடான சாதத்தில் நெய்விட்டு மணத்தக்காளி கீரை பொரித்த குழம்பை பிசைந்து சாப்பிடவேண்டும்.மணத்தக்காளி குழம்பு வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.

Sunday, March 2, 2014

முருங்கைக்கீரை சாம்பார்

தேவையானப் பொருள்கள்:
துவரம்பருப்பு-1/4 கப்
முருங்கைக்கீரை-ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம்-5
தக்காளி-பாதி
பச்சைமிளகாய்-1
பூண்டுப்பல்-2
மஞ்சள்தூள்-சிறிது
மிளகாய்த்தூள்-ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப்பூ-ஒரு டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்-சிறிது
காய்ந்தமிளகாய்-1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு குக்கரில்(அ)பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.
நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.
இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.
இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Wednesday, February 26, 2014

முடக்கத்தான் இலை சூப்

தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் இலை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன் 
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ப.மிளகாய் - 2
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.முடக்கத்தான் இலை நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.  கடைசியாக இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்த்து இறக்கவும்..  48 நாட்கள் தொடர்ந்து இந்த சூப்பை குடித்து வந்தால், சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும்.