Tuesday, July 30, 2013

முருங்கைக்காய் சூப


தேவையானவை: முருங்கைக்காய் - 4, பாசிப்பருப்பு -  ஒரு டேபிள்ஸ்பூன் (குழைய வேகவிடவும்), வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டு - 2 பல், வெண்ணெய், கார்ன்ஃப்ளார் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கார்ன்ஃப்ளாரை கால் கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். முருங்கைக் காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு, ஆறியதும் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் வெண்ணெயை  உருக்கி, பொடி யாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டை சேர்த்து நன்கு வதக்கி, மசித்து வைத் துள்ள பாசிப்பருப்பு - முருங்கை கலவை மற்றும் 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மற்றும் உப்பு சேர்த்து இறக்கி... மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment