Monday, October 28, 2013

ஆவாரம் பூ சூப்

 ஆவாரம் பூ சூப் தேவை
ஈர ஆவாரம்பூ - 1 கப் (அ) உலர்ந்த பொடி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 250 மி.லி
கேரட் - 1
பீன்ஸ் - 5
தக்காளி - 1
வெங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி, புதினா - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை 
கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக்கலக்கவும். பிறகாய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.
உடலுக்கு வலிவு தரும் சூப் ஆவாரம் பூ சூப் ஆவாரம் பூ அழகை வர்ணிக்க ‘ஆவாரம் பூவே’ என்கிறோம்.
ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ.
உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.

No comments:

Post a Comment