Sunday, March 2, 2014

முருங்கைக்கீரை சாம்பார்

தேவையானப் பொருள்கள்:
துவரம்பருப்பு-1/4 கப்
முருங்கைக்கீரை-ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம்-5
தக்காளி-பாதி
பச்சைமிளகாய்-1
பூண்டுப்பல்-2
மஞ்சள்தூள்-சிறிது
மிளகாய்த்தூள்-ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப்பூ-ஒரு டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்-சிறிது
காய்ந்தமிளகாய்-1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு குக்கரில்(அ)பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.
நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.
இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.
இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment