தேவையான பொருட்கள்:
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பட்டாணி - 500 கிராம்
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3-4 பற்கள் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும்,
சீரகம், கடுகு சேர்த்து 1-2 நிமிடம் தாளித்து, பின் அதில் மல்லி, ஏலக்காய்
பொடி, மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி விட
வேண்டும்.
பின்னர் அதில் பட்டாணி, இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் மிளகு சேர்த்து, தீயை
அதிகரித்து, 5 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.
பட்டாணியானது நன்கு வெந்துவிட்டால், இறுதியில் அதில் எலுமிச்சை சாறு
சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், பட்டாணி
ரெசிபி ரெடி.
No comments:
Post a Comment