Monday, March 10, 2014

பட்டாணி

தேவையான பொருட்கள்: 
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
மல்லி - 1/2 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பட்டாணி - 500 கிராம் 
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு - 3-4 பற்கள் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
மிளகு தூள் - தேவையான அளவு 
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்) 
கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க) 
செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு சேர்த்து 1-2 நிமிடம் தாளித்து, பின் அதில் மல்லி, ஏலக்காய் பொடி, மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் பட்டாணி, இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் மிளகு சேர்த்து, தீயை அதிகரித்து, 5 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும். பட்டாணியானது நன்கு வெந்துவிட்டால், இறுதியில் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், பட்டாணி ரெசிபி ரெடி.

 

No comments:

Post a Comment