தேவையானவை:
சிவப்பு காராமணி - ஒரு கப்,
பாகு வெல்லம் (பொடித்தது) - ஒரு கப்,
வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
சிவப்பு
காராமணியை வறுத்து, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில்
வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு
கரைத்து சிறிது கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு
காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து... எள்ளுப் பொடி, தேங்காய்
துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... காராமணி இனிப்பு சுண்டல்
தயார்.
No comments:
Post a Comment