Monday, September 30, 2013

ரங்கோலி சுண்டல்




தேவையானவை: 
பச்சைப் பட்டாணி, முளைகட்டிய சோளம், சோயா - தலா ஒரு கப், கேரட் துருவல் - 4 டீஸ்பூன், மாங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சோளம், பட்டாணி, சோயா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி விழுது, மாங்காய் துருவல், கேரட் துருவல், வேக வைத்த சோளம், பட்டாணி, சோயா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவினால்... ரங்கோலி சுண்டல் ரெடி

No comments:

Post a Comment