Friday, October 18, 2013

பைனாப்பிள் மோர் குழம்பு

தேவையானவை: 
சற்று புளித்த தயிர்- 1 கப்,
பைனாப்பிள் -1 துண்டு,
மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு -அரை டீஸ்பூன்,
உப்பு -தேவையான அளவு.
அரைக்க: 
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய்- 3,
இஞ்சி -ஒரு துண்டு,
சீரகம் -அரை டீஸ்பூன்.
செய்முறை: 
மோரை கடைந்து கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து வைத்து விட்டு மீதியை மோருடன் சேருங்கள். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பைனாப்பிளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு, எடுத்து வைத்திருக்கும் (அரைத்த) விழுது சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிட்டு இறக்குங்கள். பாதியளவு எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து, அதில் வேகவைத்த பைனாப்பிள், கரைத்த மோர் சேருங்கள். நன்கு கிளறிக்கொண்டே ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மீதமுள்ள எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை பொரித்து சேருங்கள்.

No comments:

Post a Comment