தேவையானவை:
ஓமவல்லி
இலை - 10, துளசி இலைகள், - 10,
இஞ்சி - ஓர் அங்குல நீள துண்டு (சுத்தம்
செய்து, தோல் நீக்கவும்), லவங்கம் - 3,
நெய் - 2 டீஸ்பூன்,
மிளகு - 10,
தேன் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடிக்கவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை
விழுதாக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய்யை விட்டு சூடாக்கி... அரைத்த
விழுது, பொடித்த பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும்
இறக்கி ஆற வைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு உதவும்.
No comments:
Post a Comment