Wednesday, July 31, 2013

பனீர் ஜால் ஃப்ரீஸ்

தேவையானவை: பனீர் - 200 கிராம், கேரட், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாஸ்  - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் -  தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை சதுர சதுரமாக 'கட்’  செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கேரட், வெங்காயம், குடமிளகாயை நீள நீளமாக ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கவும், அடி கனமான வாணலியில் வெண்ணெயை உருக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது, கேரட், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக பனீரை சேர்த்து நன்கு கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும் (விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை மேலே தூவி பரிமாறலாம்).

No comments:

Post a Comment