Tuesday, July 30, 2013

பனீர் கீர்

தேவையானவை: பால் - அரை லிட்டர், பனீர் துண்டுகள் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 6, சர்க்கரை - கால் கப் அல்லது விருப்பத்துக்கேற்ப.
செய்முறை: பனீர் துண்டுகளை மிதமான சூட்டில் இருக்கும் நீரில் நன்கு கழுவி துருவிக் கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் பால், சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை சூடாக்கவும். பாலை சற்று ஆற வைத்து... பனீர், பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment