தேவையானவை: அரிசி திப்பிலி - 10, கண்டதிப்பிலி - சிறிதளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் புளிக் கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூளை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment