தேவையானவை: பப்பாளிப்பழத் துண்டுகள் - 10, இட்லி அரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், நெய் - 100 மில்லி, தேங்காய் துருவல் - ஒரு கப்.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை ஒரு மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். சிறிது மசிந்த உடன் பப்பாளித் துண்டுகளையும் சேர்த்து அரைக்கவும். பணியாரக் கல் குழியில் நெய் தடவி, சிறிய கரண்டியால் மாவை ஊற்றி, சிறிது நெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு அடுக்கவும்.
குறிப்பு: பப்பாளி, கண்ணுக்கு மிகவும் நல்லது.
குறிப்பு: பப்பாளி, கண்ணுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment