தேவையானவை: தக்காளி - 5, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், பால் - 2 கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான வாணலியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து, 3 டம்ளர் நீர் ஊற்றி, 10 நிமிடம் வேகவிட்டு, ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, அரைத்து வடிகட்டவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி, மைதாவை சேர்த்துக் கிளறி, பால் சேர்த்து நன்கு கலக் கவும். ஏற்கெனவே வடிகட்டி வைத்திருக் கும் தக்காளி சாறை அதில் ஊற்றி, நன்றாக கலக்கி, மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment