Monday, July 29, 2013

மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் அல்லது பச்சை மணத்தக்காளி - 100 கிராம், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,  எண்ணெய் - 10 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... சாம்பார் பொடி போட்டு வறுத்து, மணத்தக்காளியை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு சேர்த்து, புளியைக் கரைத்து விட்டு, கொதிக்க வைத்து இறக்கி, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.
குறிப்பு: மணத்தக்காளி காய்க்கும் சீஸனில் அதை வாங்கி... தயிரில் உப்பு சேர்த்து, மணத்தக்காளியை போட்டு ஊற வைத்து, காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டால்... வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment