Wednesday, July 31, 2013

மீல்மேக்கர் பிரியாணி

தேவையானவை - மீல்மேக்கர் கோலா வுக்கு: மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்) - 25, பொட்டுக்கடலை - கால் கப் (மிக்ஸியில் பொடிக்கவும்), இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 5 பல், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பிரியாணிக்கு: பாசுமதி அரிசி - 2 கப், தேங்காய்ப் பால் - 2 கப், வெங்காயம், தக்காளி - தலா 3, பச்சை மிளகாய் - 5, இஞ்சி -  பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்,  புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து பிழிந்து, தண்ணீரில் அலசி நன்கு நீரை ஒட்டப் பிழிந்து, ஒன்றிரண்டாக 'கட்’ செய்து கொள்ளவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்கு பிசைந்து,  மிக சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுத்தால்... மீல்மேக்கர் கோலா ரெடி.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும், பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து, ஒரு கப் நீர் விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். (வதக்கும்போது சிட்டிகை உப்பு சேர்க்கவும்). பிறகு, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதில்  ஊற வைத்த அரிசி மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடத்துக்குப்  பிறகு இறக்கவும்.
பிரியாணியுடன் மீல்மேக்கர் கோலா உருண்டைகளை சேர்த்து, சாதம் உடையாமல் கிளறி, ஆனியன் - தயிர் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment