Wednesday, July 31, 2013

பனீர் வித் கேப்ஸிகம்

தேவையானவை: பனீர் - 200 கிராம் (வெந்நீரில் கழுவி சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று, வெங்காயம் - 2, தக்காளி - 6, பூண்டு - 6 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை சிறு சதுரங்களாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு தக்காளி வேகும்வரை கொதிக்கவிடவும். தக்காளி வெந்ததும் பனீர், குடமிளகாய் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment