தேவையானவை: வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், பச்சை மொச்சை (தோல் உரித்து) - 100 கிராம், கத்திரிக்காய் - 2, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு, பெருங்காயம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மொச்சையை குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கி எடுத்து வைக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, சாம்பார் பொடி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்த உடன் கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு, வேக வைத்த மொச்சையும் போட்டு, சிறிது கொதித்ததும் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து கொட்டி... பெருங்காயம் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
குறிப்பு: மொச்சையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment