செய்முறை: வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுக்கவும். பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். கடலைப்பருப்பையும் தனியாக வறுக்கவும். பின்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். வெல்லத்தை நீரில் கரைய விட்டு இளம் பாகாக காய்ச்சவும் (லேசாக உருட்ட வரும் மெழுகு பதம்). நறுக்கிய கொப்பரையை நெய் விட்டு வறுத்து, சலித்து வைத்திருக் கும் மாவுடன் சேர்க்கவும். சுக்குத் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி, சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: இதில் என்ன பொருள் சேர்த்துள்ளது என்று கண்டுபிடிப்பதே கடினம் என்பதால்தான் இந்த உருண்டைக்கு 'பொருள் விளங்கா உருண்டை’ என்று பெயர். கெட்டியாக இருப்பதால் 'கெட்டி உருண்டை’ என்றும் கூறுவார்கள்.
No comments:
Post a Comment