செய்முறை: ஓமத்தை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரில் அலசி எடுத்து... புதினா, துளசி இலை, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோல் உரித்த பூண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெயை ஒன்றாக சேர்த்து, வடிகட்டிய தண்ணீரை விட்டு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பிசைந்து வைத்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இது வாய்க்கு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
No comments:
Post a Comment