Friday, August 23, 2013

மட்டன் கீமா புலாவ்

 தேவையான பொருட்கள்
 பாசுமதி அரிசி - 2 கப்
 கொத்துக்கறி - 300 கிராம்
 தயிர் - 2 கப்
 வெங்காயம் - 1 இஞ்சி,
 பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
 லவங்கம் - 6
 ஏலக்காய் - 8
 மிளகு - 1/2 டீஸ்பூன்
 பாதாம் - 1/4 கப்
 பிஸ்தா - 1/4 கப்
காய்ந்த திராட்சை - 1/2 கப்
 குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
 நெய் - 5 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப
 செய்முறை
 * ஒரு பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 * இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பாதாம் பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கீமாவைச் சேர்த்து வதக்கவும்.
 * இப்போது போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கறியை வேகவிடவும்.
 * பிரஷர் போனதும் திறந்து பாசுமதி அரிசியைச் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.
 * மட்டனும், அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவைப் பரிமாறவும்.

No comments:

Post a Comment