Saturday, August 17, 2013

ரோஜா குல்கந்து


தேவையானவை: பன்னீர் ரோஜாப்பூ - 20, நெய் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு கப், பால் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10.
செய்முறை: ரோஜாப்பூவை இதழ்களாக ஆய்ந்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது நெய் விட்டு வதக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக பால் சேர்த்து கெட்டியாகக் கிளறி, மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். கூடவே, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

No comments:

Post a Comment