தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், கம்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியையும், கம்பையும் தனித் தனியாக ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒன்று சேர்த்து ஊற வைக்கவும். எல்லாம் நன்றாக ஊறிய உடன்... அரிசி, கம்பு இரண்டையும் மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்துக்கு அரைக்கவும். பருப்புகளை தனியாக அரைத்து, எல்லா மாவையும் ஒன்று சேர்த்து... உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். மாவை தோசைக்கல்லில் சிறிய அடைகளாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: சத்து நிறைந்த கம்பை பயன்படுத்தி, இனிப்பு அடையும் தயாரிக்கலாம்.
No comments:
Post a Comment