தேவையானவை: காய்ந்த சோளம் - 200 கிராம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளத்தை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி (தோல் சீவி), பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ஒரு பங்கு ரவைக்கு மூன்று மடங்கு என்ற அளவில் தண்ணீரை கடாயில் கொதிக்கவிடவும். மற்றொரு காடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு நன்கு வதக்கி... கொதிக்கும் நீரில் போட்டு தேவையான உப்பு சேர்த்து, சோள ரவையைப் போட்டு நன்கு கிளறவும். சிறிது ஒரு ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழிந்து, மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவவும்..
குறிப்பு: சோளக் கதிரை சுட்டு சாப்பிடலாம். வேக வைத்து சாப்பிடலாம். அடை, வடை, கஞ்சி என்று பலவிதமாக தயாரித்தும் சாப்பிடலாம். பிஞ்சு சோளத்தை அப்படியே சாப்பிடலாம். இதில் மாவு சத்து அதிகம்.
No comments:
Post a Comment