தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், சோயா சங்ஸ் - அரை கப், வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தயிர் - அரை கப், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை - சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, கொத்தமல்லி, புதினா இலைகள் - மொத்தமாக ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கவும்) தேங்காய்ப்பால் - ஒரு கப், வறுத்த முந்திரி - 6, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை மிகவும் மெல்லியதாக, நீளநீளமாக நறுக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, பிழிந்தெடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் 2 முறை நன்கு பிசைந்து கழுவவும். கடாயில் சிறிது நெய் விட்டு அதை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
இதற்கு வெங்காய தயிர் பச்சடி சரியான சைட் டிஷ்.
No comments:
Post a Comment