தேவையானவை: அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, களைந்து, உலர்த்தி அரைத்த மாவு) - 1 கப், வெண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவில் உப்பு, வெண்ணெய் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, இடியாப்பம் அச்சில் போட்டு, எண்ணெய் தடவிய தடவிய தட்டில் பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்கய்ப்பாலில் ஏலக்காய்த்தூள், சர்க்கரையை கலக்கவும். இடியாப்பத்தை தட்டில் வைத்து, கிண்ணத்தில் தேங்காய்ப்பால் வைத்து பரிமாறவும்.
குறிப்பு: ஆவியில் வெந்ததால், இடியாப்பம் எளிதில் ஜீரணமாகும்
No comments:
Post a Comment