தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், புளித்த தயிர் - அரை கப், மோர் மிளகாய் - 2 அல்லது 3, காய்ந்த மிளகாய் - 1, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிரில் உப்பு, அரிசி மாவு போட்டு கட்டியில்லாது கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், மோர் மிளகாய் சேர்த்துக் கிளறி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வறுக்கவும். கரைத்து வைத்ததை அதில் கொட்டி கிளறவும். வெந்து இறுகி வரும் சமயம் எண்ணெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
குறிப்பு: இட்லி மிளகாய்பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment